உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி - ஊழியர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்- கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில், 3-வது நாளாக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவிலும் போராட்டம் நீடித்து வருவதால், சென்னை, திருச்சி, சேலம் சாலையில் கட்டணமின்றி வாகனங்கள் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஊழியர்களை ஆள்குறைப்பு செய்யும் நடவடிக்கைகளை சுங்கச்சாவடி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியிலும் பாஸ்டேக் நடைமுறைக்கு வந்ததால், அங்கு பணியாற்றும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கைகளை சுங்கச்சாவடி நிர்வாகம் மேற்கொண்டது.

அதன்படி, ஆட்குறைப்பின் முதல்கட்டமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் 28 ஊழியர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஊழியர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டு, அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பணிக்கு வரவேண்டாம் என சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.
இதனைக் கண்டித்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர், சுங்கச்சாவடி நிர்வாக அலுலகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தம் செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 3-வது நாளாக நீடிக்கிறது.
சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக கடந்து செல்கின்றன. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மைய பகுதியில் அமைந்துள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து செல்லும் 100க்கான வாகனங்கள் பணம் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்கின்றன.
விடுமுறை நாட்கள் மற்றும் ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகமாக வாகனங்கள் பயணித்து வருகின்றன. இந்த சூழலில், சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் 3-வது நாளாக கட்டணமின்றி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications