கடலூர் மக்கள் உஷாராக இருப்பது நல்லது .. ககந்தீப் சிங் பேடி அறிவுரை
கடலூர்: கஜா புயல் பாதிப்பு கடலூர் மாவட்டத்திற்கு அதிகம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககந்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
கஜா புயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவானது. இந்த புயல் தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்தது. இந்நிலையில் இந்த பாதையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது மேற்கு திசை நோக்கி செல்கிறது.
இந்நிலையில் இது இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. கடலூர் மற்றும் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்பதால் கடலூர் மாவட்டத்துக்கு சற்று பாதிப்பு இருக்கும் என்பதால் அங்கு மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

முன்னெச்சரிக்கை
கடலூர் மாவட்டத்துக்கு புயல் பாதிப்பு பணிகளை பார்வையிட மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககந்தீப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில் கஜா புயல் பாதிப்பு கடலூர் மாவட்டத்திற்கு அதிகம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

எச்சரிக்கை
எந்த வானிலை முன்னெச்சரிக்கைகளையும் மக்கள் உதாசீனப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். அவர் இவ்வாறு மக்களை எச்சரிப்பதற்கு காரணம் உண்டு.

புயல்
கடந்த காலங்களை பார்த்தோமேயானால் மழை, புயல் என எதுவாக இருந்தாலும் கடலூருக்குத்தான் பெரும் சேதம் ஏற்படும். கடலூர் மாவட்டத்தில் தானே புயல் கடந்த 2011-ஆம் ஆண்டு கடலூருக்கும் புதுவைக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அந்த ஆண்டின் அதிதீவிரமான புயல் என வர்ணிக்கப்பட்டது.

தண்ணீர் புகும்
இந்த புயல் கோர தாண்டவத்தை ஏற்படுத்தியது. அதுபோல் வடகிழக்கு பருவமழை பெய்தாலும் கடலூர் மாவட்டத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவது உள்ளிட்டவை ஏற்படும். எனவே வானிலை எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications