ரயில்வே கேட்டை மூடாத கேட் கீப்பர்.. விசாரணையில் வெளியான உண்மை! வலுவான ஆதாரம் இதோ!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட்டை பள்ளி வாகனம் கடக்க முயன்றபோது ரயில் மோதியதில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கேட் கீப்பர், கேட்டை மூடாமல் இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது.

ஜூலை 8ம் தேதி கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை பள்ளி வேன் ஒன்று கடக்க முயன்றிருக்கிறது. ஆனால் அப்போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் ரயில் வந்த நிலையில், வேன் மீது ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இது குறித்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

railway Tamil Nadu school

முதற்கட்டமாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த விபத்தில் கேட் கீப்பர் மீது எந்த தவறும் கிடையாது என்று தெற்கு ரயில் தெரிவித்திருந்தது. இதற்கேற்றார் போல பங்கஜ் சர்மாவும், தான் கேட்டை மூடிதான் வைத்திருந்ததாகவும் கூறியிருந்தார். ஆனால் பங்கஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தன.

குறிப்பாக கேட் கீப்பர் பங்கஜ், விபத்து நடந்த பிறகு ஆலம்பாக்கம் ரயில்வே அதிகாரியை தொடர்பு கொண்டிருக்கிறார். அவரிடம் தான் கேட்டை மூடவில்லை என்பதை கூறியிருக்கிறார். இந்த உரையாடல் ரெக்காட் ஆகியுள்ள நிலையில், பங்கஜ்தான் விபத்து ஏற்பட முக்கிய காரணம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஆலம்பாக்கம் ரயில்வே அதிகாரியை தொடர்பு கொண்ட கேட் கீப்பர், கேட்டை மூடாமல் மூடியதாக கூறி ரகசிய எண்ணை பகிர்ந்திருக்கிறார். ஆனால் விபத்து நடந்த பின்னர்தான், மீண்டும் அதிகாரியை தொடர்பு கொண்டு விபத்து குறித்து பேசி, கேட்டை மூடவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு தமிழ் மொழி புரியாதாலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாலும்தான் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். மட்டுமல்லாது, கேட்க கீப்பராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து புதியதாக தமிழகத்தை சேர்ந்தவர் கேட் கீப்பராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியாவில் மொத்தம் 16,583 ரயில்வே கேட்கள், கேட் கீப்பரின் பராமரிப்பில் இருக்கின்றன. இந்த பகுதிகளில் இன்டர் லாக்கிங் சிஸ்டம் பொறுத்தப்படவில்லை. இந்த சிஸ்டம் பொறுத்தப்பட்டால், ரயில்வே கேட் தானாக மூடப்படும். பின்னர் தானாக திறக்கப்படும். கேட் மூடப்பட்டால்தான் ரயில் செல்வதற்கான அனுமதியே கிடைக்கும். ஆக தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் இந்த செயல்முறையை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+