சாம்பார் அண்டாவில் தவறி விழுந்த பெண் குழந்தை.. உடல் வெந்து பரிதாப மரணம்
சாம்பார் பாத்திரத்தில் விழுந்து பெண் குழந்தை உயிரிழந்தது
கடலூர்: ஒன்றரை வயது குழந்தை சூடான சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தாழநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. இவரது மனைவி தனலட்சுமி.. இவர்களுக்கு 5 வயதில் கிரிஷ் என்ற ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் கிருபாஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
மணிகண்டன் ஒரு விவசாயி.. சொந்தமாக நிலம் வைத்து, அதில் விவசாயம் செய்து வருகிறார்..அந்த வயலில் மேலும் சிலரை வேலைக்கு வைத்துள்ளார்.

சாம்பார்
இந்நிலையில், கடந்த 26-ம் தேதி மணிகண்டன், வயலில் வேலை செய்ய வந்திருப்பவர்களுக்கு சேர்த்து மதிய உணவு தயார் செய்யும்படி சொல்லிவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். தனலட்சுமியுடம் அனைவருக்கும் சேர்த்து சாப்பாடும், சாம்பாரும் செய்துள்ளார்.. கொதிக்க கொதிக்க இருந்த சாம்பாரை ஒரு பெரிய அண்டாவில் ஊற்றி வைத்துவிட்டு, குழந்தைக்கு பாலை காய்ச்சி கொடுப்பதற்காக கிச்சனுக்கு சென்றுள்ளார்.

குழந்தை
அப்போது குழந்தை கிருபாஸ்ரீ, தன் அம்மாவின் பின்னாடியே நின்று கொண்டிருந்திருக்கிறாள்.. தனலட்சுமியோ, அடுப்பில் பாலை வைத்துவிட்டு, அதையே கவனித்து நின்றுள்ளார்.. பின்னால் நின்றிருந்த குழந்தையை தனலட்சுமி கவனிக்கவில்லை.. பிறகு திடீரென சாம்பார் பாத்திரத்தின் மூடியை பிடித்து இழுத்துவிட்டது அந்த குழந்தை.. மூடியை இழுத்த வேகத்தில், அதே சாம்பார் பாத்திரத்தில் குழந்தை தவறி விழுந்துவிட்டது..

கதறல்
இதனால் குழந்தை உடம்பெல்லாம் வெந்து போனது.. வலியால் கதறி அழுதது.. இதையடுத்து அக்கம்பக்கத்தினரும் விரைந்து வந்து குழந்தையை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்... அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்...

உயிரிழப்பு
அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது... ஆனாலும் குழந்தை சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.. பெண்ணாடம் போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்புகூட, சேலத்தில் சுடுநீரில் குழந்தை ஒன்று தவறி விழுந்து பரிதாபமாக இறந்த நிலையில், இது மற்றொரு சம்பவமாக அதிர்ச்சியை கூட்டி வருகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications