ஆண் குழந்தை பெற்றெடுத்த பள்ளி மாணவி.. போக்சோவில் கைதான வேதியியல் ஆசிரியர்.. கடலூரில் ஷாக்
கடலூர்: கடலூரில் பள்ளி மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்த வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டு இருந்தபோதே ஆசிரியரை போலீசார் கைது செய்து அழைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமீப காலமாக பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அதிகம் அரங்கேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுவது, பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி அதிர்ச்சியளிக்கின்றன.

இந்த நிலையில் கடலூரில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூரில் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதில் மாணவி கர்ப்பமாகி ஆண் குழந்தையும் பெற்றெடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்த மாமங்கலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வேதியியல் ஆசிரியராக மலர்செல்வம் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு இவரது வகுப்பில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
தற்போது அந்த மாணவி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அப்போது மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மாணவியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி மாணவியிடம் விசாரித்த போது தான் பள்ளியில் வேதியியல் ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டிருந்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளி வகுப்பறைக்குள் வந்தே போலீசார் அவரை கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், பள்ளி மாணவியை ஆய்வுக்கூடத்தில் வைத்து பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்றும், மீறி சொன்னால் செய்முறை தேர்வில் மதிப்பெண்ணை குறைத்துவிடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதேபோன்று வேறு மாணவிகள் யாருக்கும் இவர் பாலியல் தொல்லை கொடுத்தாரா? வேறு எந்த மாணவியும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்றும் விசாரித்து வருகிறார்கள்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications