கடலூரில் ஹைட்ரோகார்பன் சர்ச்சை.. கடலுக்குள் 18 கிமீ தொலைவில் 4 புதிய கிணறுகள் அமைக்கத் திட்டம்!
கடலூர்: கடலூர் அருகே 4 புதிய ஹெட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஏற்கனவே உள்ள கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்த நிலையில், புதிய கிணறு அமைக்க கடலூர ஒழுங்குமுறை ஆணையத்திடம் இந்துஸ்தான் நிறுவனம் அனுமதி கோரி மனு அளித்துள்ளது. இந்த புதிய கிணறுகளை ரூ.425 கோடி மதிப்பீட்டில் அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் டெல்டா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவி வரும் சூழலில், கடலூர் அருகே மேலும் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கிணறுகளில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இருப்பு கணிசமாக குறைந்துள்ள நிலையில், இந்த புதிய கிணறுகளை அமைப்பதற்கான அனுமதியை வழங்குமாறு கடலூர சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அந்நிறுவனம் மனு அளித்துள்ளது. இந்துஸ்தான் நிறுவனம் தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியைத் தொய்வின்றித் தொடர புதிய இடங்களை ஆழ்கடல் பகுதியில் கண்டறிந்துள்ளது.
இந்த புதிய 4 ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகளும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில், ஆழ்கடல் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துள்ளதால், உற்பத்தியை அதிகரிக்க இந்த ஆழ்கடல் திட்டத்திற்காக சுமார் ரூ.425 கோடி முதலீடு செய்ய இந்துஸ்தான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடலுக்குள் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான ஆரம்பகட்ட துளையிடும் பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக, மத்திய-மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெற வேண்டும். இதன்படியே, கடலூர் மாவட்ட ஒழுங்குமுறை ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கையுடன் இந்துஸ்தான் நிறுவனம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது.
ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குக் கடுமையான எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில், பரங்கிப்பேட்டை ஆழ்கடல் பகுதியில் ரூ.425 கோடி மதிப்பில் 4 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்கத் தனியார் நிறுவனம் அனுமதி கோரியுள்ள விவகாரம், கடலோரப் பகுதி மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications