Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் இசையமைப்பாளர் இமான்.. இதெல்லாம் இறைவன் போட்ட பிச்சை.. என்னா தன்னடக்கம்!

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியாக்குறிச்சி நரிக்குறவர் காலனியில் புதிய குடியிருப்புகளை இசையமைப்பாளர் இமான் திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தை அடுத்த பெரியாக்குறிச்சி நரிக்குறவர் காலனியில் குடியிருப்புகள் மற்றும் பாடசாலைகள் இசையமைப்பாளர் இமான் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கட்டி முடிக்கப்பட்டது.

Music Director Imman helps Narikurava family to built 6 houses

இதன் திறப்பு விழா நேற்றைய தினம் நடந்தது. இசையமைப்பாளர் இமான் 6 கூரை வீடுகள் மற்றும் பாடச்சாலைகளை திறந்து வைத்து பயனாளிகளிடம் வழங்கினார். அவருக்கு நரிக்குறவர்கள் பாசி மாலை அணிவித்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

அவருடன் சமூக ஆர்வலர் உமா செல்வமும் இருந்தார். நரிக்குறவர்களின் ஒவ்வொரு குடிலாக சென்று பார்த்து அவர்களுடன் குழு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார் இமான். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இமான். விசில் படத்தில் அழகிய அசுரா பாடல் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார்.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களின் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடல் மிகவும் பிரபலம். அது போல் ஊதா கலரு ரிப்பன் பாடலும் இவர் இசையமைத்ததுதான். தற்போது வள்ளி மயில், மலை போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார்

இவர் 2008 ஆம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரு பெண் குழந்தைகள். இந்த நிலையில் கடந்த ஆண்டு மோனிகாவும் இமானும் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

விருத்தாசலம் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இரவு பாடசாலை மற்றும் சேதமடைந்த வீடுகளை சரி செய்து கொடுத்துள்ளார். இவரின் சேவையை மக்கள் பாராட்டி வருகிறார்கள். இறைவன் எனக்கு கொடுத்ததால் நான் இல்லாதவர்களுக்கு செய்கிறேன் என தன்னடக்கத்துடன் இமான் கூறுகிறார்.

இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் என ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் இமானும் ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் சேலம் கல்பாறைப்பட்டி, செவ்வாய் காட்டில் வசித்து வரும் அமுதா என்ற மாணவி 10, 11 ஆம் வகுப்புகளில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவருடைய அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் இந்த ஆண்டு ஜூன் மாதம் விபத்தில் சிக்கி இறந்துவிட்டனர். குடும்பத்தினரையே இழந்த அந்த சிறுமி தன் படிப்புக்கு உதவுமாறு அரசாங்கத்தை அணுகினார். இந்த செய்தியை அறிந்த இசையமைப்பாளர் இமான் அந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

அது போல் கண் பார்வையற்ற திருமூர்த்தியின் கண்ணான கண்ணே பாடலை கேட்ட அவர் அந்த நபருக்கு படத்தில் பாடும் வாய்ப்பை கொடுத்துள்ளார். அது போல் சமூகவலைதளங்களில் வெளியாகும் நலிவடைந்தவர்களுக்கு இருக்கும் பாடும் திறமையை கேட்டால் உடனே அவர்களுக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+