வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைத்த கதைதான்.. நாம் தமிழர் சீமான் கிண்டல்!
கடலூர்: ரூ 2000 வாபஸ் என்பது வேலையில்லா தையல்காரன் யானைக்கு டவுசர் தைப்பது போன்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
முத்தரையர் நினைவு நாளையொட்டி புதுவை- கடலூர் 100 அடி சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சிக் கொடியை ஏற்றினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான சம்பவத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் பதவி விலகியிருக்க வேண்டும். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி அப்போது முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் யாருக்கும் தார்மீக பொறுப்பே இல்லை. எடப்பாடி ஆட்சியிலும் கள்ளச்சாராயம் இருந்தது. ஆனால் மக்கள் சாகவில்லை. ஆளுநருக்கு கடிதம் கொடுத்தால் போதுமா? தமிழக முதல்வர் ஏற்கெனவே வெளிநாடு சென்றிருந்தாரே அதன் மூலம் என்ன முதலீடுகளை தமிழகத்திற்கு பெற்றுத் தந்தார். தொழில் வளர்ச்சி என்பது பசப்பு வார்த்தை.
தமிழ் இருக்கிறது என்கிறார்கள். ஆனால் எங்கே இருக்கு... 12 ஆயிரம் பேர் தமிழ் தேர்வை எழுத வரவே இல்லை. தமிழ் தமிழ் என்கிறார்கள். ஆனால் இன்னா மச்சான் ரொம்ப ஃபீல் பண்ற.. டீ சாப்பிடலாம் வா" என்கிறார்கள். இதில் எங்கே தமிழ் வாழ்கிறது. ஒரு கடைத்தெருவில் கூட தமிழில் பெயர் இல்லை. ஒரு வானூர்தியில் ஓட்டுநர் பெயர் இல்லை. ஒரு விமானத்தில் ஓட்டுநர் தமிழில் அறிவிப்பு வெளியிட்டார்.
அனைவரும் கைதட்டினார்கள். தமிழ் உணர்வு அனைவருக்கும் இருக்கு. டாக்டர் ராமதாஸ் அய்யா இந்த 80 வயதிலும் தமிழை தேடி சென்றது பாராட்டுக்குரியது. அடுத்து வருபவர்கள் தமிழில் தொடர வேண்டும். வெயிலின் கொடுமை நீடிப்பதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும். தூத்துக்குடியில் நேர்மையான கிராம நிர்வாக அதிகாரி கொல்லப்பட்டதற்கும் ரூ 10 லட்சம் , கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கும் ரூ 10 லட்சம, இது என்ன நியாயம்?
இனி யாராவது மனமுடைந்தால் விஷம் குடிக்கத் தேவையில்லை. விஷச்சாராயம் குடித்தால் போதும் ரூ 10 லட்சம் கிடைக்கும் என்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார்கள். ரூ 2000 நோட்டுகளை திரும்ப பெறுவது முட்டாள்தனம். வேலையில்லாத தையல்காரர் யானைக்கு டவுசர் தைத்த கதைத்தான் என சீமான் விமர்சித்தார். ரூ 2000 நோட்டுகள் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என்றும் கடந்த 19 ஆம் தேதி முதல் புழக்கத்தில் இருக்காது என்றும் ஆர்பிஐ அறிவித்துள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications