மரணத்தைத் தாண்டி வேல் யாத்திரையில் பங்கேற்றுள்ளேன்... யாரும் தடுக்க முடியாது - குஷ்பு பேச்சு
எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடைபெறும் என்றும் எது நடந்தாலும் நம்முடைய நோக்கம் ஒன்றுதான் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
கடலூர்: மரணத்தைத் தாண்டி வேல் யாத்திரையில் பங்கேற்று உள்ளேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். எந்த விபத்தும் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் தடைகளை தாண்டி யாத்திரை நடைபெறுகிறது என்றும் கூறியுள்ளார் குஷ்பு.
Recommended Video

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அவ்வப்போது ட்விட்டரில் கருத்து கூறும் குஷ்பு, ஆர்பாட்டங்களில் பங்கேற்று வருகிறார்.
இன்று கடலூரில் நடைபெற்ற வேல் யாத்திரையில் கலந்து கொள்ள தனது கார் மூலம் சென்னையில் இருந்து சென்ற போது அவரது கார் விபத்தில் சிக்கியது. அதில் காயங்களின்றி தப்பினார் குஷ்பு. கடவுள் முருகன் அருளால் உயிர் தப்பியதாக கூறிய அவர் வேறு கார் மூலம் கடலூருக்கு சென்றார்.

குஷ்பு ட்வீட்
இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட குஷ்பு, எந்த விபத்தும் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் முருகன் அருளால் தான் மாற்று காரில் தற்போது யாத்திரையில் கலந்து கொள்ள சென்று கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தடுக்க முடியாது
மேலும் தனது உடல்நலம் குறித்து விசாரித்து அனைவருக்கும் நன்றி என்றும் யாத்திரையைத் தொடர்ந்து நடத்த தடை வந்தாலும் யாத்திரையைத் தொடர்ந்து நடத்துவேன் என்றும் எந்த விபத்தும் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறினார்.

வேல் யாத்திரையில் குஷ்பு பேச்சு
கடலூரில் லாரி போல மேடை அமைத்து அதில் வேல் யாத்திரை நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய குஷ்பு,
மரணத்தைத் தாண்டி வேல் யாத்திரையில் பங்கேற்று உள்ளேன் என்று கூறினார். எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடைபெறும் என்றும் கூறினார்.

பாஜக வெற்றி
எது நடந்தாலும் நம்முடைய நோக்கம் ஒன்றுதான் என்றும் கூறிய குஷ்பு 2021ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் தெரிவித்தார். மோடி தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் ஆதரவும் அங்கீகாரமும் அளித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார் குஷ்பு.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications