"நான் நல்ல மார்க் எடுக்கலைன்னா கல்யாணம் செய்துவச்சிடுவாங்க".. விருத்தாசலத்தில் பிளஸ் 2 மாணவி தற்கொலை
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பிளஸ் 2 மாணவி பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயியார் மடம் தெருவைச் சேர்ந்தவரின் 17 வயது மகள். இவர் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 படித்தார்.
நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை இறுதிச் சடங்கு நடந்தது. தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மாணவி
போலீஸார் விசாரித்ததில் மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் அவர் கூறுகையில், கணக்கு தேர்வை நான் சரியாக எழுதவில்லை. தமிழ் தேர்வை நான் சரியாக எழுதவில்லை. நான் கலெக்டராக வேண்டும் என என் அப்பா, அம்மா விரும்புகிறார்கள். ஆனால் என்னால் அதிக மதிப்பெண்களை எடுக்க முடியாது.

கல்லூரி
இதனால் என்னை கல்லூரியில் சேர்த்துவிடாமல் என் படிப்பை பிளஸ் 2 வுடன் நிறுத்திவிட்டு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்துவிடுவர். பெற்றோர் என்னை மன்னிக்கவும். நான் கடவுளிடம் செல்கிறேன். என் உடலை பார்க்க என்னுடன் படித்த நண்பர்கள் வந்தால் அவர்களை அனுமதிக்கவும்.

கடிதம் ஏன்
நான் இந்த கடிதத்தை ஏன் எழுதுகிறேன் என்றால் நான் எதற்காக இறந்தேன் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என அந்த கடிதத்தில் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். அண்மையில் கள்ளக்குறிச்சியில் மாணவி மரணம், விழுப்புரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவி தற்கொலை என தொடர்ந்து இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவது பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சினை
மாணவர்கள் எந்த பிரச்சினை என்றாலும் பெற்றோரிடம் சொல்ல வேண்டுமே தவிர தவறான முடிவை எடுக்க கூடாது என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. அது போல் பள்ளிகளிலும் கவுன்சிலிங் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும்.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications