Police Inspector: கடலூர் இன்ஸ்பெக்டர் ஒரேயடியாக பணி நீக்கம்..கடமை தவறினால் இதுதான் நடக்கும்! நடந்தது என்ன?
விழுப்புரம்: புலன் விசாரணையை முறையாக செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டு குற்றச்சாட்டில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் பணியில் இருந்தே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சரியாக புலன் விசாரணை செய்யாமலும், குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமலும், பணியில் அலட்சியமாகவும், மெத்தனமாகவும் ஜெயசங்கர் இருந்திருக்கிறார்.
காவல் பணியில் பணியிட மாற்றம், பணி மாற்றம், தற்காலிக பணி நீக்கம் ஆகியன காவல்துறையினருக்கு தண்டனைகளாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால் பணி நீக்கம் என்பது அரிதானதாகவே நடக்கும். அந்த வகையில் பட்டியலின வாலிபர் உயிரிழப்புக்கு காரணமானதாக கூறப்படும் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இரு தரப்பினர் மோதல்
விழுப்புரத்தை அடுத்த கெடார் அருகே சூரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 22). கட்டிட தொழிலாளி. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி இரவு 11 மணியளவில் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சிலரும் அதே கிராமத்தில் உள்ள மூர்த்தி என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது கை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த மூர்த்தி அவர்களை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது.
அப்போது மூர்த்தி மற்றும் ராஜா தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் திட்டி தாக்கத் தொடங்கினர். தொடர்ந்து இரு தரப்பினரும், கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் இரு தரப்பினர் மீதும் போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தூக்கிட்டு உயிரை மாய்த்த ராஜா
இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து ராஜா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ராஜா தற்கொலைக்கு காரணமான மூர்த்தி மற்றும் மோகன் ஆகியோரை கைது செய்யக் கோரி போராட்டம் செய்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த கெடார் போலீசார் மூர்த்தி, மோகனை கைது செய்தனர்.
இதற்கிடையே ராஜா புகார் கொடுத்தும் அதனை முறையாக விசாரிக்காததும், மெத்தனமாக செயல்பட்டதாக கூறி அப்போதைய கெடார் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயசங்கர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுதா ஆகிய இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
13 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை
பணி இடைநீக்கத்திற்கு பிறகு மீண்டும் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் ஜெயசங்கர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அப்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணையை தொடங்கினார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் 13 அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் 26 அரசு தரப்பு சான்று ஆவணங்களையும் ஆய்வு செய்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பபட்டது. இந்த அறிக்கையினை விழுப்புரம் சரக போலீஸ் டிஐஜி அருளரசுவிடம் தாக்கல் செய்யப்பட்டது.
பணி நீக்கம் செய்து உத்தரவு
இதன் அடிப்படையில் தற்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்டது காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இந்த சம்பவத்தில் 2 தரப்பினரும், இரு வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அறிந்தும், வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு எந்தவித அறிவுரையும் வழங்காமல் இருந்துள்ளார்.
சரியாக புலன் விசாரணை செய்யாமலும், குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமலும், பணியில் அலட்சியமாகவும், மெத்தனமாகவும் ஜெயசங்கர் இருந்திருக்கிறார். மேலும் ராஜா தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்தவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடமையை மீறி செயல்பட்டதால்
கடமையை மீறி செயல்பட்டு உள்ளார் என்றும், இதனால் தமிழ்நாடு சார்நிலை காவல் ஆய்வாளர் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதற்காக இன்ஸ்பெக்டர் ஜெயசங்கரை பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து டிஐஜி அருளரசு உத்தரவிட்டு இருக்கிறார். சரியாக புலன் விசாரணை செய்யாமல் அலட்சியமாக செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
கம்பீரை காப்பாற்றிய சஞ்சு.. "அந்த" 9 ஓவர் சேட்டன் ஆட்டத்தை கவனிச்சீகளா.. இங்க விஷயமே இதுதான்! -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்! -
இஸ்லாமிய நாடுகளே மாறி மாறி தாக்கிக்கொள்வது ஏன்? அதென்ன சன்னி - ஷியா வேறுபாடு.. ஒரு சிம்பிள் விளக்கம் -
நீ தள்ளி நின்றால், நானும் தள்ளி நிற்பேன்.. ராகுலை எதிர்க்க முடிவெடுத்த ஸ்டாலின்.. போர் ஆமாம் போர்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
இடுப்பில் மது பாட்டில்.. மோடி போதை ஒழிப்பு பற்றி பேசிய NDA பொதுக்கூட்டத்திலேயே.. இதென்ன சோதனை? -
"இந்து, முஸ்லீம், ஏசு.." வெஸ்ட் இண்டீஸை ஓடவிட்ட கையோடு சஞ்சு சாம்சன் செய்த செயல்! டிரெண்டிங் -
"பிடிச்சு வெளுத்து விடுங்க யுவராஜ் பாய்.." அபிஷேக் சர்மாவை வைத்து செய்யும் நெட்டிசன்கள்- மீம்ஸ்! -
சகட்டுமேனிக்கு தாக்கும் ஈரான்.. இஸ்ரேலுக்காக வளைகுடா நாடுகளை அமெரிக்கா கைவிட்டு விட்டது.. சவுதி அதிகாரி பகீர்












Click it and Unblock the Notifications