கடலூர் - சிதம்பரம் ரூட்: நாளை தனியார் பேருந்துகள் இயங்காது.. டோல்கேட் கட்டணத்தை எதிர்த்து போராட்டம்!
கடலூர்: கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. சுங்கச்சாவடியில் 50 முறை பேருந்து சென்று வர ரூ.14,090 நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை புதுச்சேரி வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை அமைக்கும் பணி முழுவதும் முடிவடையாத நிலையில் கடலூர் அருகே உள்ள பூண்டியாங்குப்பம் கிராமத்திலிருந்து சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் வரை அமைக்கப்பட்டுள்ள சாலைக்கு சுங்க வரி வசூலிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.

சுங்கக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளதாலும், உள்ளூர் மக்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாததாலும், பல்வேறு தரப்பு மக்களும், சுங்கக் கட்டணம் செலுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டோல் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், 60 கி.மீ ஒரு டோல்கேட் என்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முழுமையாக விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நெடுஞ்சாலை பணிகள் முடிந்தவுடன் தான் சுங்கக் கட்டண வசூல் துவக்கப்பட வேண்டும் என்றும், 20 கி.மீட்டருக்கும் குறைவான தூரம் செல்பவர்களுக்கு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் பேருந்துகள் மற்றும் லாரிகளுக்கு விதித்துள்ள அநியாய கட்டணத்தைக் குறைத்திட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடலூர் - சிதம்பரம் தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் 50 முறை பேருந்து சென்று வர ரூ.14,090 நிர்ணயம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடலூர் - சிதம்பரம் வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் நாளை (டிசம்பர் 23) இயங்காது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications