Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமாவளவன் சொன்ன "அந்த" வார்த்தை.. கப்சிப் ஆன "சிறுத்தைகள்".. நெல்லிக்குப்பத்தில் என்னதான் நடந்தது?

திருமாவளவன் பிரச்சாரத்தில், விசிகவினர் தர்ணா செய்தனர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: திருமாவளவன் பிரச்சாரத்தில், விசிகவினரே தர்ணா செய்திருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.. அப்படித்தான் நேற்று கடலூரில் நடந்துள்ளது.. என்னன்னு பாருங்க..!

நகர்ப்புற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிந்துவிட்து.. இதில் ஆளுக்கு ஒரு பக்கம் தமிழகத்தின் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்..

இந்த முறை திமுக மட்டுமே கூட்டணியாக போட்டியிடுகிறது.. அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, உள்ளிட்ட பல கட்சிகள் தனித்தனியாகவே களம் காணுகின்றன..

 விசிக

விசிக

அந்த வகையில், விசிக மற்றும் திமுக கூட்டணியை ஆதரித்து திருமாவளவன் மேற்கொண்ட பிரச்சாரம், மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.. கடந்த சட்டமன்ற தேர்தலை போலவே இந்த முறையும் பாஜகவை விமர்சித்து திருமாவளவன் பேசிய பேச்சுக்கள் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக, திருச்சி, மதுரை, கடலூர் மாவட்டங்களில் திருமாவளவன் பேசிய பேச்சின் தாக்கம் இன்னும் அரசியல் அரங்கில் எதிரொலித்து கொண்டிருக்கிறது.

 நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம்

நேற்றுகூட நெல்லிக்குப்பத்தில் தன்னுடைய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருமாவளவன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது வைடிப்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, விசிக நிர்வாகிகள் சிலர் அங்கு திரண்டு வந்தனர்.. திருக்கண்டேஸ்வரம், சோழவல்லி ஆகிய தங்களது பகுதிகளிலும் வந்து வாக்கு சேகரிக்க வர வேண்டும் என்று சொன்னார்கள்.. ஆனால், கடலூருக்கு பிரச்சாரத்துக்கு செல்ல வேண்டி இருப்பதால், அங்கு வர முடியாது என்று திருமாவளவன் சொல்லி உள்ளார்.

சமாதானம்

சமாதானம்

இதனால், திடீரென சாலையில் அங்கேயே உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.. இதையடுத்து, போலீசார் உடனடியாக வந்து அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்... பிறகு, திருமாவளவன் நெல்லிக்குப்பத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, கடலூருக்கு கிளம்பினார்.. நெல்லிக்குப்பம் அண்ணாசாலை அருகே திறந்த வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.. அப்போது மேலும் சில நிர்வாகிகள் மறுபடியும் திருமாவளவனை தங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்யுமாறு அழைத்தனர்.

கடலூர்

கடலூர்

இன்றுதான் கடைசி நாள் பிரச்சாரம்.. கடலூரில் திமுக கூட்டணிக்கு பிரச்சாரம் செய்தாக வேண்டும்.. எனவே, இப்போதைக்கு வர முடியாது என்று திருமாவளவன் அவர்களிடமும் பதிலளித்தார்.. ஆனால், அண்ணன் வராமல் போக மாட்டோம்.. அண்ணன் வந்தே ஆகணும்.." என்று வழிமறித்து நின்றனர்.. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட ஆரம்பித்தது.

Recommended Video

    #TNLocalBodyElection கள்ளக்குறிச்சி: இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்... திருமாவளவன் பேட்டி!
    திருமாவளவன்

    திருமாவளவன்

    உடனே திருமாவளவன் அவர்களை பார்த்து, "உண்மையான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள்... கட்சியின் கட்டுப்பாட்டை மதித்து நடப்பார்கள்.. அப்படித்தான் செயல்பட வேண்டும்" என்றார்.. திருமாவளவன் இப்படி சொன்னதுமே, நிர்வாகிகள் அடுத்த செகண்டே அமைதியாகிவிட்டனர்.. டக்கென விலகி அவருக்கு வழிவிட்டனர்.. அதன்பிறகு, திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டு கடலூர் சென்றார்.. தலைவனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடந்த தொண்டர்களின் விசுவாசம் கடலூரை நெகிழ செய்துவிட்டது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+