Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் மீனின் வலையில் 30 கிலோ முதலை குட்டி! கிட்ட பார்த்தால் 5 அடி நீளம்! ஆச்சரியத்தில் சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குளத்தில் அங்குள்ள சிலர் மீன் பிடிக்க சென்றிருக்கிறார்கள்.. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரகம் ரகமாக மீன்கள் கிடைக்கும், அதை சமைத்து சாப்பிடலாம் என்று ஆசை ஆசையாக இவர்கள் குளத்தில் மீன் பிடித்துள்ளனர்.. அப்போதுதான் இந்த ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. இந்த செய்தி இணையத்தில் வைரலாகி கொண்டும் உள்ளது. என்ன காரணம்?

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கே.ஆடுர் கிராமம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கிராமமாகும்... இங்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பெரிய குளம் ஒன்று உள்ளது..

Cuddalore Baby Crocodile fishing net

கிராம மக்களின் தேவையை பெரிதும் பூர்த்தி செய்வது இந்த குளம்தான்.. இந்த குளத்தில் குளிப்பதும், துணி துவைப்பதும், கால்நடைகளை குளிப்படுத்துவதும் செய்து வருகிறார்கள்..

30 கிலோ எடை

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில், சில மீனவர்கள் வழக்கம்போல் குளத்தில் மீன்பிடிக்க வலை விரித்துள்ளனர்.. அதில் ஏதோ ஒன்று "வெயிட்டாக" சிக்கவும் அனைவரது முகத்திலுமே பயங்கர சந்தோஷம்..

எப்படியும் பெரிய மீன்கள் சிக்கி இருக்கும் என்று வலையை இழுத்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. ஆம், சுமார் 5 அடி நீளமும் 30 கிலோ எடையும் கொண்ட முதலைக்குட்டி வலையில் சிக்கியதை கண்டனர்.. முதலில் இதை பெரிய வகை மீன் என்றுதான் நினைத்துள்ளனர்.. பிறகு உற்றுப் பார்த்தபோதுதான் அது முதலைக்குட்டி என்பதை தெரிந்து மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

முதலைக்குட்டி

கிராம மக்கள் உடனடியாக ஒன்றாக சேர்ந்தும், முதலைக்குட்டியை வலையுடன் சேர்த்து கவனமாக கரைக்கு கொண்டு வந்தனர். பிறகு வனத்துறையிடம் உடனடியாக தகவல் தந்தனர்.. சில நிமிடங்களில் வனத்துறையினர், அந்த குளத்துக்கு வந்து, முதலைக்குட்டியை மீட்டு பாதுகாப்பாக வக்கிரமாரி ஏரியில் கொண்டுபோய் விட்டனர். .

ஆனால், கிராம மக்களுக்கு இப்போதுதான் கலக்கம் அதிகமாகிவிட்டது.. காரணம், முதலை குட்டி குளத்தில் இருக்கிறது என்றால், பெரிய முதலை அந்த குளத்தில் இருப்பதாகத்தானே அர்த்தம்? தினந்தோறும் புழங்கி வரும் குளத்தில் பெரிய முதலை இருப்பது அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. எப்படியாவது அந்த பெரிய முதலையையும் பிடித்துவிடுங்கள் என்று கிலியுடன் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

முதலைப் பண்ணைகள்

இந்த சம்பவம் புதியதல்ல. முதலைகளை சர்வ சாதாரணமாக பார்க்க வேண்டுமானால் சிதம்பரம் பகுதியில் ஈஸியாக பார்க்கலாம். இங்கு நீர்நிலைகள் மட்டுமல்லாமல் புதர்களில் முதலைகள் மறைந்து வாழ்வதுண்டு.. அதனால்தான் கடந்த 20 வருடங்களாகவே சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கை எழுந்துவருகிறது.

ஆனால், அதிமுக, திமுக என அரசுகள் மாறிய போதும் நிலையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. முதலை பண்ணையும் இதுவரை வைக்கவில்லை மக்கள் வருத்தத்துடன் சொல்கிறார்கள்..

பெரிய முதலை

இப்போது தினசரி பயன்படுத்தும் குளத்தில் ராட்சச முதலை இருப்பதால், உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் அதனை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட வேண்டும் என கோரிக்கையிட்டு வருகின்றனர்.

மீனுக்கு விரித்த வலையில் முதலை குட்டி சிக்கியதும், முதலை குட்டி உள்ளதால் பெரிய முதலையை விரைவில் பிடித்துவிடுங்கள் என்று கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதும், சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் பெற்று வருகின்றன..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+