சென்னை மக்களே ஒரு ஹேப்பி நியூஸ்.. முழுசாக நிரம்பி வழிகிறது வீராணம் ஏரி!
Recommended Video

கடலூர்: இந்த ஆண்டில் முதல்முறையாக முழு கொள்ளவை வீராணம் ஏரி எட்டியுள்ளது.
சென்னை மாநகரின் குடிநீர்தேவையை பூர்த்தி செய்யும் முக்கியமான ஏரிகளில் ஒன்றுதான் வீராணம் ஏரி. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் 4 கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் கல்லணை, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்துசேருகிறது. தற்போது போதிய மழை இல்லாததால் வீராணம் ஏரி வறண்டும் போகும் நிலையில் காணப்பட்டது.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 30-ந் தேதி 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணை வழியாக கீழணை வந்தது. அதன் பின்னர் கடந்த 7-ந் தேதி அதிகாலை முதல் வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரதொடங்கியது. இதன் காரணமாக வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயரத்தொடங்கியது.
இதன் காரணமாக இந்த ஆண்டில் முதல்முறையாக முழு கொள்ளளவான 47.5 அடியை வீராணம் ஏரி எட்டியுள்ளது. ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக 59 கனடி நீர் வெளியேற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications