ஓகி புயல்: 270 கேரளா மீனவர்கள் கதி என்ன? கடற்படை, விமானப் படை தீவிர தேடுதல்

ஓகி புயலில் சிக்கிய கேரளாவின் 270 மீனவர்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஓகி புயல் தமிழகத்தை மட்டுமல்ல கேரளாவையும் புரட்டி எடுத்து வருகிறது. மீன்பிடி தொழிலுக்கு சென்ற 270 மீனவர்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது திடீரென ஓகி புயலாக உருவெடுத்தது. ஓகி புயல் நேற்று கன்னியாகுமரியில் இருந்து 60 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.

Cyclone Ockhi: 270 Kerala fishermen missing?

அப்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலமான காற்று வீசியது. இந்த புயல் மெல்ல கன்னியாகுமரியை விட்டு அரபிக் கடலில் லட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்தது.

அப்போது குமரியில் மட்டுமின்றி திருவனந்தபுரத்திலும் கனமழையும் பேய்க்காற்றும் சுழன்றடித்தது. இதனிடையே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற கேரளாவைச் சேர்ந்த 270 மீனவர்களை காணவில்லை என கூறப்படுகிறது.

இந்த மீனவர்களை தேடும் பணியில் கடற்படை, விமானப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+