பட்ஜெட் 2019: 2022ஆம் ஆண்டுக்குள் 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும்.. பட்ஜெட்டில் அறிவித்த நிர்மலா!
டெல்லி: 2022ஆம் ஆண்டுக்குள் 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும் என மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019-2020ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி அனைவருக்கும மலிவு விலை வீடு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.95 கோடி வீடுகள் 2022ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம், வீடற்றவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் 2015 - 2016ஆம் ஆண்டில் வீடு கட்டி முடிக்க 314 நாட்கள் ஆன நிலையில் கடந்த 2017- 2018ஆம் நிதியாண்டில் 114 நாட்களாக குறைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
வாடகை வீட்டுவசதிகளை மேம்படுத்துவதற்காக பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார். தற்போதைய வாடகை சட்டங்கள் பழமையானவை என்றும் அவகுத்தகைதாரர்-குத்தகைதாரர் உறவுகள் நியாயமாக இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.
கட்டுப்படியாகக்கூடிய வகையில் உள்கட்டமைப்பு நிலையை வழங்குவது, தரைவிரிப்பு பகுதியை அதிகரிப்பது மற்றும் வருமான வரையறைகளை மறு வரையறை செய்வது, மலிவு விலையில் வீடுகளை வழங்குவது என அரசு தொடரும் என்றும் மத்திய அமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மலிவு விலையில் வீடு வழங்கும் முயற்சியை அரசு தொடர்ந்து வருகிறது. பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் வீட்டு வசதிக்கான மானியம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications