மத்திய அரசு அடேங்கப்பா தாராளம்.. நிலக்கரி துறையில் 100% அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி
டெல்லி: நிலக்கரி சுரங்க மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு துறையில், தானியங்கி வழியில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று, அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டியை தொடர்ந்தார். அவர் கூறியதாவது: வெளிநாட்டு ஒற்றை பிராண்ட் சில்லறை விற்பனையாளர்களுக்கான அந்நிய நேரடி முதலீட்டு விதியை அரசு தளர்த்தியுள்ளது.

நிலக்கரி சுரங்க மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு துறையில், தானியங்கி வழியில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி துறை, சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு விதிமுறை தளர்வு.. மத்திய அரசு அதிரடி முடிவு
உள்நாட்டு உற்பத்தியை உயர்த்துவதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications