சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட பச்சன் சிங்.. 111 வயது முதியவரின் கடமையுணர்வை மெச்சிய மக்கள்!
டெல்லி: டெல்லியின் மிக வயதான நபரான பச்சன் சிங் வாக்களித்தார். அவருக்கு வயது 111. சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட பச்சன், சாந்த்கார் பகுதியில் வாக்களித்தார்.
டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று 6-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் இன்றே தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். டெல்லியின் மூத்த வாக்காளர் பச்சன் சிங் ஆவார். இவருக்கு வயது 111 ஆகும்.
Delhi's oldest voter, 111-year old Bachan Singh after casting his vote at a polling booth in Sant Garh. #Phase6 #LokSabhaElections2019 pic.twitter.com/RP6MIAsk5B
— ANI (@ANI) May 12, 2019
இவர் சாந்த்கார் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையத்துக்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.
மே.வங்கத்தில் பதற்றம்.. தேர்தலுக்கு சில மணி நேரம் முன்னர் படுகொலை செய்யப்பட்ட பாஜ பிரமுகர்
வாக்களித்து விட்டு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். தள்ளாத வயதிலும் வாக்களிப்பதை கடமையாக கொண்டு வாக்களிக்க வந்த பச்சன் சிங்கை அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.