பிறப்புறுப்பில் கத்தரிக்கோலால் பலமுறை குத்தி உள்ளனர்.. 12 வயசு பெண் உயிர் ஊசல்... ஷாக்கில் டெல்லி
12 வயது சிறுமியை கடுமையாக தாக்கி உள்ளனர் கொடூரர்கள்
டெல்லி: 12 வயசு பெண்ணை பலாத்காரம் செய்தபோது, அவரது பிறப்புறுப்பிலேயே கத்தரிக்கோலால் குத்தப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.. இதனால் சிறுமியின் பிறப்புறுப்பு, குடல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாம்.. எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அந்த பிஞ்சு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறது.. நிர்பயா சம்பவத்துக்கு பிறகு இப்படி கொடூரம் நடந்துள்ளது, தலைநகரை தலைகவிழ வைத்து வருகிறது.
லாக்டவுன் என்றெல்லாம் இந்த காம கொடூரர்களுக்கு கணக்கே இல்லை.. யார், என்ன என்ற வரைமுறையே இல்லாமல் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்கள்.. நாளுக்கு நாள் நாட்டில், குறிப்பாக வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், மேற்கு டெல்லியில், பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில், 12 வயசு பெண்ணை வீடு புகுந்து நாசம் செய்துள்ளனர்.. இந்த பெண் ரொம்பவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.. அப்பா, அம்மா, அக்கா என எல்லாருமே ஒரு கம்பெனியில் வேலை பார்த்துதான் பிழைப்பை ஓட்டி வருகின்றனர்.. கடந்த 4-ம் தேதி அன்றும் அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.
அன்று சாயங்காலம் 5.30 மணி இருக்கும்.. அப்போது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.. அந்நேரம் பார்த்து காம கொடூரர்கள் உள்ளே நுழைந்து பலாத்காரம் செய்துள்ளனர்.. அத்துடன் ஒரு கூர்மையான ஆயுதத்தால் சிறுமியை பலமுறை தாக்கி உள்ளனர்.. அக்கம்பக்கத்தினர் சிறுமியின் அலறல் கேட்டு, அவரது வீட்டிற்கு ஓடிச்சென்று பார்த்தனர்.
பால்கனியில் ரத்த வெள்ளத்தில் சிறுமி கிடப்பதை கண்டு அலறி துடித்து, உடனடியாக மீட்டு சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரிக்கும், அதன்பிறகு எய்ம்ஸுக்கும் அழைத்து செல்லப்பட்டார்.. தற்போது சிறுமிக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆராய்ந்து வருகிறார்கள்.
வீட்டுக்குள் நுழைந்த அந்த காமுகர்கள், சிறுமியின் தலையிலும் முகத்திலும் 5, 6 முறை அந்த கூர்மையான பொருளை வைத்து தாக்கி உள்ளார்களாம்..
முதல்கட்டமாக சிறுமியை கூர்மையான பொருட்களால் தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது டாக்டர்கள் அதுகுறித்து விரிவான தகவலை சொல்லி உள்ளனர்.. பாலியல் பலாத்காரத்தில் சிறுமி கத்தரிக்கோலால் பல முறை குத்தப்பட்டு உள்ளாராம்.. சிறுமியின் அந்தரங்க இடத்தில் கத்தரிக்கோலால் குத்தப்பட்டதால், பிறப்புறுப்பு மற்றும், குடல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டு உள்ளன.
இது சம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. அவர் பெயர் கிருஷ்ணா.. வயது 33 ஆகிறதாம்.. அவர் போதைக்கு அடிமையானவர் என்கிறார்கள்.. பல கிரிமினல் கேஸ்களில் சம்பந்தப்பட்டவராம்.. பலமுறை ஜெயிலுக்கும் போய் வந்தவராம்.. சிறுமி வீட்டில் கொள்ளை அடிக்க போனபோது, இந்த பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறுகிறார்கள்.. எனினும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, சுமார் 100 சந்தேக நபர்களை போலீசார் விசாரித்து உள்ளனர்.
முன்னதாக, ஆஸ்பத்திரியில் போராடி கொண்டிருக்கும் சிறுமியை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்தார்.. அந்த குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயும் அறிவித்தார்.. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் என எல்லா கட்சிகளும், அமைப்புகளும் அரசை வலியுறுத்தி வருகின்றன..டெல்லியை உலுக்கிய நிர்பயா சம்பவத்தை போல இந்த கொடூர சம்பவமும் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளன... இதனால் தலைநகரமே தலைகவிழ்ந்து உள்ளது!

பலாத்காரம்
அன்று சாயங்காலம் 5.30 மணி இருக்கும்.. அப்போது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.. அந்நேரம் பார்த்து காம கொடூரர்கள் உள்ளே நுழைந்து பலாத்காரம் செய்துள்ளனர்.. அத்துடன் ஒரு கூர்மையான ஆயுதத்தால் சிறுமியை பலமுறை தாக்கி உள்ளனர்.. அக்கம்பக்கத்தினர் சிறுமியின் அலறல் கேட்டு, அவரது வீட்டிற்கு ஓடிச்சென்று பார்த்தனர்.

ரத்த வெள்ளம்
பால்கனியில் ரத்த வெள்ளத்தில் சிறுமி கிடப்பதை கண்டு அலறி துடித்து, உடனடியாக மீட்டு சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரிக்கும், அதன்பிறகு எய்ம்ஸுக்கும் அழைத்து செல்லப்பட்டார்.. தற்போது சிறுமிக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆராய்ந்து வருகிறார்கள்.

கத்தரிக்கோல்
வீட்டுக்குள் நுழைந்த அந்த காமுகர்கள், சிறுமியின் தலையிலும் முகத்திலும் 5, 6 முறை அந்த கூர்மையான பொருளை வைத்து தாக்கி உள்ளார்களாம்.. முதல்கட்டமாக சிறுமியை கூர்மையான பொருட்களால் தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது டாக்டர்கள் அதுகுறித்து விரிவான தகவலை சொல்லி உள்ளனர்.. பாலியல் பலாத்காரத்தில் சிறுமி கத்தரிக்கோலால் பல முறை குத்தப்பட்டு உள்ளாராம்.

அந்தரங்க இடம்
சிறுமியின் அந்தரங்க இடத்தில் கத்தரிக்கோலால் குத்தப்பட்டதால், பிறப்புறுப்பு மற்றும், குடல்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டு உள்ளன. இது சம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. அவர் பெயர் கிருஷ்ணா.. வயது 33 ஆகிறதாம்.

கிரிமினல்
அவர் போதைக்கு அடிமையானவர் என்கிறார்கள்.. பல கிரிமினல் கேஸ்களில் சம்பந்தப்பட்டவராம்.. பலமுறை ஜெயிலுக்கும் போய் வந்தவராம்.. சிறுமி வீட்டில் கொள்ளை அடிக்க போனபோது, இந்த பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறுகிறார்கள்.. எனினும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, சுமார் 100 சந்தேக நபர்களை போலீசார் விசாரித்து உள்ளனர்.

நிர்பயா
முன்னதாக, ஆஸ்பத்திரியில் போராடி கொண்டிருக்கும் சிறுமியை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்தார்.. அந்த குடும்பத்தக்கு 10 லட்சம் ரூபாயும் அறிவித்தார்.. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் என எல்லா கட்சிகளும், அமைப்புகளும் அரசை வலியுறுத்தி வருகின்றன..டெல்லியை உலுக்கிய நிர்பயா சம்பவத்தை போல இந்த கொடூர சம்பவமும் டெல்லியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளன... இதனால் தலைநகரமே தலைகவிழ்ந்து உள்ளது!
Recommended Video
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications