எங்கே செல்லும் இந்த பாதை.. இந்தியாவில் இன்று 2,61,500 பேருக்கு கொரோனா..உயிரிழப்பும் புதிய உச்சம்!
டெல்லி: இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 2,50,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்

அசைந்து கொடுக்காத கொரோனா
நாடு முழுவதும் கொரோனா மீண்டும் தனது அசுர பலத்தை காட்டி வருகிறது. கடந்த சில வாரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்த கொரோனா தற்போது தினசரி பாதிப்பில் 2,50,000-க்கும் மேல் சென்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வந்தாலும் கொரோனா அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை.

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு என்னும் ஆயுதத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளன. மகாராஷ்டிராவில் 15 நாட்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு மாநிலங்கள் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்பதை அமல்படுத்திவிட்டன. ஆனால் பொது மக்கள் மாஸ்க் உள்ளிட்ட வழிமுறைகளை மறந்ததே கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு காரணம் என்றும் இதனை முழுமையாக பின்பற்றாவிட்டால் கொரோனாவை ஒழிக்க முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

2,61,500 பேருக்கு புதிதாக தொற்று
இந்த நிலையில் இந்தியாவில் வழக்கம்போல் கொரோன ஜாலியாக ஆட்டம் போட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,61,500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும்1,38,423 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு 1,47,88,109 ஆக இருக்கிறது. கொரோனாவில் இருந்து மொத்தம் 1,28,09,643 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் 1,77,150 ஆக உயர்ந்துள்ளது.

புதிய உச்சம்
கொரோனாவுக்கு நாடு முழுவதும் 18,01,316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன. இதுவரை இந்தியாவில் 12,26,22,590 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக 2,50,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி உயிரிழப்பும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் தினசரி குணமடைபவர்களை விட தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications