ஸ்டிரைக்கில் குதித்த வங்கி ஊழியர்கள்.. இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வங்கி சேவை..!
வங்கி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
டெல்லி: வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதால், இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வங்கி சேவை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மின்சார திருத்த சட்டம், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
பாஜக அரசை அரசை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் 2 நாட்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன..

துவங்கியது
இதன்படி இன்றும் நாளையும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பொது வேலைநிறுத்தம் ஆரம்பமாகி உள்ளது.. 'மக்களைக் காப்போம், நாட்டைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை போராட்டத்தை துவங்கியுள்ளனர்.. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன..

வேலைநிறுத்தம்
இதில், வங்கி சேவை பாதிக்கப்படும். வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால், இன்றும் நாளையும் வங்கிகள் செயல்படாது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.. இதனால், வரும் 30, 31ம் தேதிகளில் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

ஆண்டுக்கணக்கு
ஆண்டுக்கணக்குமுடிப்பதற்காக ஏப்ரல் ஒன்றாம் தேதியான வெள்ளிக்கிழமை வங்கிகள் செயல்பட்டாலும்கூட, வாடிக்கையாளர் சேவை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அடுத்த மாதம் 2ம் தேதி சனிக்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு என்பதால், அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாகும்..

ஆன்லைன் சேவைகள்
அதனால், இந்த வாரத்தில், இரண்டு நாட்கள் மட்டுமே வங்கிகள் முழுமையாக செயல்படும்.. எனினும், ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல தடையின்றி செயல்படும் என்றும் ஏடிஎம் மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, போதிய அளவு பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications