விரைவில் கொரோனாவுக்கு மேலும் 2 தடுப்பு மருந்து... நிர்மலா அறிவிப்பு
டெல்லி : கொரோனாவுக்கு மேலும் 2 தடுப்பு மருந்துகள் விரைவில் வர உள்ளதாக மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கோவிட் 19 தடுப்பு மருந்துகளுக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பட்ஜெட் உரையில் கூறுகையில், தடுப்பு மருந்துகள் நாடு முழுவதும் கிடைக்க வழி செய்யப்படும் . இதனால் ஆண்டுக்கு 50,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பது தடுக்கப்படும்.
தற்போது 2 கொரோனா தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கிடைக்கின்றன. இது இந்திய மக்களை மட்டுல்ல மற்ற நாடுகளில் வசிக்கும் நூற்றக்கணக்கான மக்களையும் காத்த வருகின்றன. மேலும் 2 தடுப்பு மருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன என தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்காக ரூ.2.23 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 137 சதவீதம் அதிகம் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.