மக்கள் தொகை கணக்கெடுப்பு.. நவ.10ம் தேதி முக்கிய நடவடிக்கை! மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 2021ம் ஆண்டில் நடத்தப்பட வேண்டியது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப்போடப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் நீண்ட வலியுறுத்தலுக்கு பின்னர் 2027ம் ஆண்டு மார்ச் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் வரும் நவ.10 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கிறது.
நவ.10ம் தேதி தொடங்கும் இந்த பணிகள், நவ.30 வரை நடைபெறும் என்றும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னோட்ட சோதனை என்பது, ஒரு திட்டத்தின் செயல்பாட்ட திறனை, பிரயோக சாத்தியத்தை உறுதிப்படுத்த பயன்படும் முக்கிய படியாகும். முன்னோட்ட சோதனை மூலம் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகள், நடைமுறை குறைபாடுகள் முன்கூட்டியே அடையாளம் கண்டுக்கொள்ள முடியும். களபணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பணியின் நடைமுறையை புரிந்துக்கொள்வும் இது உதவும்.












Click it and Unblock the Notifications