ஒன்று திரண்ட எதிர்க்கட்சிகள்.. ஒப்புகை வாக்குச்சீட்டு எந்திரம் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு
டெல்லி: ஒப்புகைச் சீட்டு எந்திரத்தை அனைத்து வாக்குச் சாவடிகளில் பயன் படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையில் 22 எதிர்க்கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. குறிப்பாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைப்பது, வாக்குப் பதிவு மையங்களை உருவாக்குவது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் செய்யப்பட்டு வரும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
இந் நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சியினர் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், ஒப்புகைச் சீட்டு எந்திரத்தை அனைத்து வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
அதற்கான மனுவை அவர்கள் தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோராவிடம் அவர்கள் வழங்கி உள்ளனர். குழுவில் மல்லிகார்ஜூன கார்கே, அனந்த்சர்மா, சந்திரபாபு உள்ளிட்டோர் இருந்தனர். திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதி, இ.கம்யூ சார்பில் டி. ராஜா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஆணையரை சந்தித்த பின் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: வாக்குச்சாவடிகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும்.
அதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒப்புகை சீட்டு வழங்குவதை கடைப்பிடிக்கவேண்டும். 50 சதவீதம் வாக்குப் பதிவு எந்திரங்களில் ஒப்புகை வாக்குச்சீட்டு கருவியை பொருத்த வேண்டும் என்று கூறினார். பேட்டியின் போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் இருந்தனர்.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications