லோன் ஆப்கள்.. மத்திய அரசின் தரமான சம்பவம்.. லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்
டெல்லி: லோன் ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள், மக்களை மோசடி செய்து வருவதாக புகார்கள் எழுந்த காரணத்தால், 2500க்கும் மேற்பட்ட மோசடி லோன் ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அந்த நிறுவனத்தால் நீக்கப்பட்டிருப்பதாக லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
லோன் ஆப்கள் புதிது புதிதாக வந்து கடன் கொடுப்பது போல் கொடுத்து மோசடியில் ஈடுபட்டன. ஏழ்மை நிலையில் இருக்கும் இளைஞர்கள் தெரியாமல் கடன் வலையில் போய் சிக்கி கொள்கிறார்கள்.. அவர்களை அனைத்து தகவல்களையும் மொபைல் மூலம் சேகரிக்கும் நிறுவனங்கள் கடனை திருப்பித்தராவிட்டால் பொதுவெளியில் அசிங்கப்படுத்துகின்றன. மேலும் கடன் வழங்குவதில் மோசமான அணுகுமுறையையும் கடைபிடிக்கின்றன இந்த லோன் ஆப்கள் பல அரசின் அனுமதி இல்லாமலும் செயல்பட்டு வந்தன.. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்து வந்தார்கள்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, லோன் ஆப்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் நிர்மலா சீதாராமன் கூறுகையில், லோன் ஆப்கள் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள், மக்களை மோசடி செய்து வருவதாக நாடு முழுவதும் புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தன.
மோசடி கடன் ஆப்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சட்டபூர்வமாக கடன் செயலிகள் பட்டியலை மத்திய அரசிடம் ரிசர்வ் வங்கியும் அளித்தது. அதை 'கூகுள்' நிறுவனத்துடன் மத்திய அரசு பகிர்ந்து கொண்டு நடவடிக்க வலியுறுத்தியது.
இதனிடையே கூகுள் நிறுவனம் தங்களுடைய 'பிளே ஸ்டோரில்' சட்டபூர்வமான ஆப்களை மட்டுமே இடம்பெற செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை 3,500 கடன் ஆப்கள் முதல் 4 ஆயிரம் கடன் ஆப்கள் வரை கூகுள் ஆய்வு செய்தது.
அதன் அடிப்படையில், 2500க்கும் மேற்பட்ட மோசடி கடன் ஆப்களை தனது 'பிளே ஸ்டோரில்' இருந்து நீக்கியும், முடக்கியும் நடவடிக்கை எடுத்திக்கிறது. மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஆகியவை நடவடிக்கை எடுத்து வருகின்றன" இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'முத்ரா' திட்டத்தின்கீழ் ரூ.26 லட்சத்து 12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 44 கோடி கடன்கள் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். முத்ரா திட்டம் என்பது பிரதமர் மோடி, கடந்த 2015, ஏப்ரல் மாதம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ், மக்கள் 10 லட்சம் ரூபாய் வரை எந்த அடமானமும் இல்லாமல் கடன் பெறலாம்.. இந்த திட்டத்தில் 3 வகைகளில் மக்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.. இந்த 3 வகைகளிலுமே வேறுவேறு கடன் வசதிகள் இருக்கின்றன..அதன்படி "சிஷு" (Shishu) என்ற திட்டத்தின்கீழ் ரூ.50,000 வரையிலும், "கிஷோர்" என்ற திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையும், "தருண்" என்ற திட்டத்தின்மூலம், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.
புதிதாக தொழில் தொடங்க ஆசைப்படுவோருக்கு மட்டுமே இந்த முத்ரா கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறைகள், கோழிப்பண்ணை, பால் பண்ணை, தேனீ வளர்ப்பு போன்ற விவசாயம் தொடர்பான தொழில்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications