Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி நெருங்குதுல்ல.. ரயில்வே வெளியிட்ட முக்கிய சேதி.. 283 சிறப்பு ரயில்கள்: பயணிகள் செம ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தீபாவளி, சாத், நவராத்திரி பண்டிகைகளை முன்னிட்டு நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம் தொடங்கினாலே பண்டிகைக் காலம் தான். ஆயுத பூஜை, நவராத்திரி கொண்டாட்டங்கள், தீபாவளி என அடுத்தடுத்து வரிசையாக பண்டிகைகள் களைகட்டும். பொங்கல் வரை இந்த பண்டிகைக்கால கொண்டாட்டங்கள் தொடரும். இந்நிலையில், சொந்த ஊர்களுக்கு பயணிக்க ரயில் டிக்கெட் கிடைக்காமல் லட்சக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை ஒட்டி, நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 283 special trains ahead of diwali and chhath celebrations

பூஜை, தீபாவளி, சாத் பண்டிகைகளை ஒட்டி 283 சிறப்பு ரயில்கள் 4,480 ட்ரிப்கள் பயணிக்கும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதலாக 6 ஆயிரம் பெட்டிகள் வரை இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேயின் இந்த அறிவிப்பு பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைக்க பெரிதும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் என அறிவிக்கப்பட்டுள்ள 283 ரயில்களில் தென் மத்திய ரயில்வேக்கு 58 சிறப்பு ரயில்கள் கிடைத்துள்ளன. இவை 404 ட்ரிப்கள் பயணிக்கும். மேற்கு ரயில்வே நிர்வாகம் 36 சிறப்பு ரயில்கள் மூலம் 1,267 ட்ரிப்களை அடிக்க உள்ளது.

வடமேற்கு ரயில்வே நிர்வாகம் 24 சிறப்பு ரயில்கள் மூலம் 1,208 ட்ரிப்களை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வே 34 சிறப்பு ரயில்கள் மூலம் 228 ட்ரிப்கள் இயக்கப்படவுள்ளது. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை 10 சிறப்பு ரயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 58 ட்ரிப்களை அடிக்கும். தென்கிழக்கு ரயில்வே 8 சிறப்பு ரயில்களையும் (64 ட்ரிப்கள்), தென்மேற்கு ரயில்வே 11 சிறப்பு ரயில்களையும் (27 ட்ரிப்கள்) இயக்க உள்ளது.

கடந்த காலங்களில் பயணித்த பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திற்கும் சிறப்பு ரயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரும் ஒரே நேரத்தில் டிக்கெட் புக் செய்து வருவதால் பலர் காத்திருப்பு பட்டியலில் இருந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+