தீபாவளி நெருங்குதுல்ல.. ரயில்வே வெளியிட்ட முக்கிய சேதி.. 283 சிறப்பு ரயில்கள்: பயணிகள் செம ஹேப்பி!
டெல்லி: தீபாவளி, சாத், நவராத்திரி பண்டிகைகளை முன்னிட்டு நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
அக்டோபர் மாதம் தொடங்கினாலே பண்டிகைக் காலம் தான். ஆயுத பூஜை, நவராத்திரி கொண்டாட்டங்கள், தீபாவளி என அடுத்தடுத்து வரிசையாக பண்டிகைகள் களைகட்டும். பொங்கல் வரை இந்த பண்டிகைக்கால கொண்டாட்டங்கள் தொடரும். இந்நிலையில், சொந்த ஊர்களுக்கு பயணிக்க ரயில் டிக்கெட் கிடைக்காமல் லட்சக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை ஒட்டி, நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பூஜை, தீபாவளி, சாத் பண்டிகைகளை ஒட்டி 283 சிறப்பு ரயில்கள் 4,480 ட்ரிப்கள் பயணிக்கும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதலாக 6 ஆயிரம் பெட்டிகள் வரை இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயின் இந்த அறிவிப்பு பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைக்க பெரிதும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் என அறிவிக்கப்பட்டுள்ள 283 ரயில்களில் தென் மத்திய ரயில்வேக்கு 58 சிறப்பு ரயில்கள் கிடைத்துள்ளன. இவை 404 ட்ரிப்கள் பயணிக்கும். மேற்கு ரயில்வே நிர்வாகம் 36 சிறப்பு ரயில்கள் மூலம் 1,267 ட்ரிப்களை அடிக்க உள்ளது.
வடமேற்கு ரயில்வே நிர்வாகம் 24 சிறப்பு ரயில்கள் மூலம் 1,208 ட்ரிப்களை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வடக்கு ரயில்வே 34 சிறப்பு ரயில்கள் மூலம் 228 ட்ரிப்கள் இயக்கப்படவுள்ளது. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை 10 சிறப்பு ரயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 58 ட்ரிப்களை அடிக்கும். தென்கிழக்கு ரயில்வே 8 சிறப்பு ரயில்களையும் (64 ட்ரிப்கள்), தென்மேற்கு ரயில்வே 11 சிறப்பு ரயில்களையும் (27 ட்ரிப்கள்) இயக்க உள்ளது.
கடந்த காலங்களில் பயணித்த பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு ரயில்வே மண்டலத்திற்கும் சிறப்பு ரயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பலரும் ஒரே நேரத்தில் டிக்கெட் புக் செய்து வருவதால் பலர் காத்திருப்பு பட்டியலில் இருந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதல் பெட்டிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ரயில்வே துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications