மீண்டும் அமைச்சரான கட்காரி.. உடனே வெளியான அறிவிப்பு.. இன்சூரன்ஸ் இல்லையா.. வந்தது புதிய சிக்கல்
டெல்லி: மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 146-ன் கீழ் இன்சூரன்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டுவது குற்றம் என்று சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்சூரன்ஸ் இல்லாமல் முதல்முறை பிடிப்பட்டால் 3 மாதம் சிறை அல்லது 2000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோரில் பலர் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சர்வ சாதாரணமாக உள்ளது. கார்கள், சரக்கு வாகனங்கள், லாரிகள் என எல்லா வாகனங்களும் கண்டிப்பாக இன்சூரன்ஸ் பேப்பருடன் தான் வாகனங்கள் ஓட வேண்டும். இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனங்களை இயக்கினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று விதிகள் உள்ளது.

ஆனால் பெரிய வாகனங்கள் மட்டுமே இன்சூரன்ஸ் விவகாரத்தில் கவனமாக உள்ளன. பைக், கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓடுவது நடக்கிறது. இப்போது உள்ள தொழில்நுட்பத்தின் படி எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த வாகனங்கள் எல்லாம் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓடுகின்றன என்பதை எளிதாக அரசால் கண்டுபிடிக்க முடியும். அந்த வகையில் ஏராளமான வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓடுவதை கண்ட மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராக நிதின் கட்காரி மீண்டும் பொறுப்பேற்றார். இதையடுத்து, மோட்டார் வாகன காப்பீடு தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.
அந்த அறிக்கையில், "மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 146-ன் கீழ், இந்திய சாலைகளில் ஓடும் மோட்டார் வாகனங்களுக்கு 3-ம் தரப்பு அபாயங்களை உள்ளடக்கிய காப்பீடு அத்தியாவசியமானது. செல்லுபடியாகும் 3-ம் தரப்பு காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்கள் அல்லது அனுமதிப்பவர்கள் சட்டத்தை மீறியதற்காக சிறை தண்டனை உள்பட பல வழிகளில் தண்டிக்கப்படுவார்கள்.
அத்தகைய குற்றவாளிகள் மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 196-ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள். முதல் குற்றம்: 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.2,000 அபராதம் அல்லது இரண்டும். மற்றும் அடுத்தடுத்த குற்றம்: 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.4,000 அபராதம் அல்லது இரண்டும்.
வாகன உரிமையாளர்கள் தங்களுடைய மோட்டார் வாகனங்களில் 3-ம் தரப்பு காப்பீட்டின் நிலையை சரிபார்த்து, ஏற்கனவே செய்யவில்லை என்றால், விரைவில் காப்பீட்டைப் பெற வேண்டும் அல்லது புதுப்பிக்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications