மத்திய அமைச்சர் ஆனார் ரக்ஷா கட்சே.. இளமையிலேயே சாதனையோடு சோதனையையும் சந்தித்தவர்.. யார் இவர்?
டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான அரசில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார் பாஜக எம்.பி ரக்ஷா கட்சே. மகாராஷ்டிர மாநிலத்தில் 3வது முறையாக எம்.பியாகியுள்ள ரக்ஷா, முதல் முறையாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலம் ரேவர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரக்ஷா கட்சே வெற்றி பெற்றார். நரேந்திர மோடி மற்றும் 72 அமைச்சர்கள் இன்று ராஷ்டிரபதி பவனில் பதவியேற்றுள்ள நிலையில், ரக்ஷா கட்சேவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்து உள்ளது.

யார் இந்த ரக்ஷா கட்சே?: ரக்ஷா கட்சே ரேவர் தொகுதியில் இருந்து இரண்டு முறை எம்.பி.யாக இருந்தவர். 2014 லோக்சபா தேர்தலில் 26 வயதில் வெற்றி பெற்ற இளம் எம்.பியான அவர், மீண்டும் 2019 இல் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ரக்ஷா காட்சே, ஜல்கான் மக்களவைத் தொகுதியில் 3.36 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) ஸ்ரீராம் பாட்டீலை தோற்கடித்தார்.
கணவர் தற்கொலை: ரக்ஷா கட்சே, கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவரது கணவர் நிகில் கட்சே, 2013 இல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரக்ஷா கட்சேவின் மாமனார் ஏக்நாத் கட்சே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வருகிறார்.
ரக்ஷா காட்சே தனது அரசியல் பயணத்தை 2010 இல் தொடங்கினார். இவர் மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள தல்-முக்தைநகரின் பஞ்சாயத்து தலைவராக செயல்பட்டார். பின்னர், அவர் ஜல்கான் மாவட்ட கவுன்சில் உறுப்பினராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரக்ஷா கட்சேவின் மாமனார் ஏக்நாத் கட்சே பாஜகவில் முக்கியமான தலைவராக இருந்தார். அவர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டவர். தற்போது 2020 ஆம் ஆண்டு முதல் என்.சி.பி கட்சி சார்பில் எம்.எல்.சியாக இருந்து வருகிறார்.

ஏக்நாத் கட்சே மருமகள்: எனினும், ஏக்நாத் கட்சே விரைவில் பாஜகவில் இணையக்கூடும் எனக் கூறப்படுகிறது. என்.சி.பி - சரத் பவார் கட்சியின் எம்.எல்.சியாக இருந்த போதிலும், நடந்து முடிந்த தேர்தலில் தனது மருமகள் ரக்ஷாவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் ஏக்நாத் கட்சே.
ரக்ஷாவிற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவை பாஜகவுக்கு தொடர்ந்து நிலை நிறுத்தும் என மகாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் நிதின் கட்கரி, பியூஷ் கோயல், ரக்ஷா கட்சே, முரளிதர் மொஹோல், ராம்தாஸ் அத்வாலே மற்றும் பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். மத்திய அமைச்சர்களாக இருந்த நாராயண் ரானே, டாக்டர் பகவத் காரத் ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி!












Click it and Unblock the Notifications