லாக்டவுன்: இந்தியாவின் 34% குடும்பங்களில் உச்சகட்ட வறுமை- ஒருவாரத்துக்கு மேல் வாழவே முடியாத நிலைமை!
டெல்லி: கொரோனா லாக்டவுனால் இந்தியாவின் 34% குடும்பங்கள் பிறரது உதவி இல்லாமல் ஒரு வாரத்துக்கு மேல் உயிரே வாழ முடியாத அளவுக்கு வறுமை கோரத்தாண்டவமாடுவதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (Centre for Monitoring Indian Economy) தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் லாக்டன் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்பட உள்ளது.
நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, லாக்டவுன் நீட்டிக்கப்படும்; ஆனால் புதிய முறையில் லாக்டவுன் அமலில் இருக்கும் என கூறியிருந்தார். இந்த நிலையில் லாக்டவுன் கால இந்திய குடும்பங்களின் நிலை குறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவை:

வேலைவாய்ப்பு இழப்பு
இந்தியாவின் 84% குடும்பங்களின் மாத வருமானம் என்பது குறைந்து போயுள்ளது. நாட்டில் பணிபுரியக் கூடிய வயதினரில் 4-ல் 1 பங்கினர் தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். மார்ச் 21-ந் தேதியன்று வேலைவாய்ப்பின்மை என்பது 7.4% ஆக இருந்தது. இது மே 5-ந் தேதியன்று 25.5% ஆக கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் 2.7 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பு
அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பு தொடர்பாக நகர்ப்புறம் மற்றும் கிராப்புறங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நகரங்களில் 65% குடும்பங்களில் ஒரு வாரத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன. ஆனால் கிராமப்புறங்களில் 54% குடும்பங்கள்தான் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு இருப்பதாக தெரிவித்துள்ளன.

வாழவே முடியாத நிலை
இந்தியா முழுவதும் 34% குடும்பங்கள் (மூன்றில் ஒரு பங்கு) பிறரது உதவி இல்லாமல் ஒரு வாரத்துக்கு மேல் உயிர் பிழைக்கவே முடியாது என்கிற நிலையில்தான் உள்ளன. ஆகையால் இத்தகைய குடும்பங்களுக்கான உதவிகள் உடனடியாக சென்றடைய வேண்டும் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைமை பொருளாதார வல்லுநர் கெளசிக் கிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிப்படையும் மாநிலங்கள்
தற்போதைய நிலையில் டெல்லி, பஞ்சாப், கர்நாடகா மாநில மக்கள் குறைவான பாதிப்பைத்தான் எதிர்கொள்ளப் போகிறார்கள். ஆனால் பீகார், ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநில மக்கள் மிக மோசமான பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications