இலங்கை குண்டுவெடிப்பு.. இந்தியர்களின் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு.. இந்திய வெளியுறவுத் துறை தகவல்
Recommended Video
டெல்லி: இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உட்பட 8 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில், வெளிநாட்டினர் உட்பட 290 பேர் உயிரிழந்தனர். உலக நாடுகள் அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

3 பேர் பலி
இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பில் பலியானோரில் 3 பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இருவர் பலி
அவர்கள் லோகாஷினி, நாராயண் சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் ஆவர் என சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த தாக்குதலில் மேலும் இரு இந்தியர்கள் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
|
கர்நாடகத்தவர்கள்
அவர்கள் கே.ஜி. ஹனுமந்தராயப்பா, எம்.ரங்கப்பா ஆகிய இருவர் ஆவர். இருவரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர்கள் தேர்தல் முடிந்தவுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

தேடும் பணி
அப்போது வெடிகுண்டு தாக்குதல் நடந்த ஹோட்டலில் இவர்கள் தங்கியிருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் இவர்களுடன் சுற்றுலா வந்த அதே கட்சியைச் சேர்ந்த மேலும் 5 பேர் மாயமாகிவிட்டனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications