எப்போதும் இல்லாத மாற்றம்.. முதல்முறை தோல்வியை ஒப்புக்கொண்ட மோடி.. என்ன காரணம்?
பிரதமர் மோடி ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு பின் நிறைய காரணம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
Recommended Video

டெல்லி: பிரதமர் மோடி ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு பின் நிறைய காரணம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரிய தோல்வியை தழுவி இருக்கிறது. சட்டீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா என்று ஐந்து மாநிலத்திலும் பாஜக தோல்வியை தழுவி உள்ளது.
இந்த தேர்தல் தோல்வியை பிரதமர் மோடி வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு அவர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
|
ஏற்கிறோம்
பிரதமர் மோடி இந்த தேர்தல் குறித்து வெளியிட்டு இருக்கும் டிவிட்டில், மக்களின் ஆணையை நாங்கள் பணியுடன் கேட்டுக்கொள்கிறோம். சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைக்க வாய்ப்பை தந்திருந்த மக்களுக்கு நன்றி. அந்த மாநிலங்களில் இருந்த பாஜக அரசுகள், மாநில முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தது.
|
காங்கிரஸ் வெற்றி
காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதற்கு வாழ்த்துகள். தெலுங்கானாவில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவிற்கும் வாழ்த்துகள். மிசோராமில் வெற்றி அடைந்த மிசோ தேசிய முன்னணிக்கும் வாழ்த்துகள்.
|
பாஜக ஒப்புக்கொண்டது
மாநில தேர்தல்களுக்காக பாஜக தொண்டர்கள் காலையில் இருந்து இரவு வரை உழைத்தனர். அவர்களின் கடின உழைப்பை நான் வணங்குகிறேன். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கம். இந்த முடிவு இன்னும் மக்களுக்கு சேவை செய்யவும், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவ வழி வகுக்கும் என்று கூறியுள்ளார்.

மொத்தமாக ஒப்புக்கொண்டார்
பிரதமர் மோடி முதல்முறையாக பாஜகவின் தோல்வியை ஒப்புக்கொண்டார் என்றுதான் கூறவேண்டும். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் அங்கம் என்றதன் மூலம் முதல் முறையாக மோடி தான் தோல்வி அடைந்ததை ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்கிறார்கள் . இது பாஜகவினருக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

உண்மையாக இருக்குமோ?
குஜராத் சட்டமன்ற தேர்தல் தொடங்கி எந்த தேர்தலிலும் பெரிதாக தோல்வி அடையாத மோடி முதல்முறை இப்படி ஒரு தோல்வியை சந்தித்து இருக்கிறார். இந்த தோல்வியால் நிஜமாகவே மனமுடைந்து அவர் இப்படி டிவிட் செய்துள்ளார் என்கிறார்கள். அவரின் இந்த டிவிட் நிஜமானதுதான் என்று பாஜகவினர் கூறுகிறார்கள்.

எல்லாம் நாடகம்
அது சமயம் டிவிட் செய்ய காரணம், அனுதாபம் தேடத்தான் என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். இந்த வருத்தமான டிவிட் மூலம் தான் இழந்த மதிப்பை அனுதாபம் மூலம் மீண்டும் மீட்டெடுக்க முடியும். அதனால்தான் மோடி வருத்தப்படுவது போல பேசுகிறார். இது நாடாளுமன்ற தேர்தலுக்கான நாடகம் என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications