5 மாநில தேர்தல்.. 2 மாநிலங்களில் காங். வெற்றி.. ம.பியில் இழுபறி.. டிஆர்எஸ் அபாரம்!
Recommended Video
டெல்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் அபார வெற்றியை நோக்கி சென்று கொண்டுள்ளது.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும், நவம்பர் மற்றும் டிசம்பரில் தேர்தல்கள் நடைபெற்றன.
மத்திய பிரதேசம், மிசோராமில் நவம்பர் 28ம் தேதி, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் டிசம்பர் 7ம் தேதிகளிலும், சட்டீஸ்கரில் இரு கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20ம் தேதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை வரையிலான நிலவரப்படி,
தெலுங்கானா: 87 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி முன்னிலை, 21 தொகுதிகளில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை, மற்ற கட்சிகள் 11 தொகுதிகளில் முன்னிலை
மத்திய பிரதேசம்: காங்கிரஸ் 110 தொகுதியில் முன்னிலை, 110 தொகுதிகளில் பாஜக முன்னிலை, 10 தொகுதிகளில் மற்ற கட்சிகள் முன்னிலை
ராஜஸ்தான்: 101 தொகுதிகளில் காங்கிரஸ், 72 தொகுதிகளில் பாஜக முன்னிலை, 26 தொகுதிகளில் மற்ற கட்சிகள் முன்னிலை
சட்டீஸ்கர்: காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளில் முன்னிலை, பாஜக 17 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, 8 தொகுதிகளில் மற்ற கட்சிகள் முன்னிலை வகிக்கிறது.
மிசோரம்: இதில் மிசோராமில் மட்டும் தற்போது முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. மிசோராமில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்து இருக்கிறது. மிசோ தேசிய கூட்டணி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 1 தொகுதியில் வென்றுள்ளது. மற்றவை 8 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பு: இன்னும் 4 மாநில தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் முழுமையாக அறிவிக்கப்படாததால், முன்னிலை நிலவரங்களில் சில மாறுபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது.