வங்கிகளுக்கு திரும்ப வந்த 2 ஆயிரம் நோட்டுக்கள் எவ்வளவு? ரிசர்வ் வங்கி கவர்னர் அளித்த பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே 23 ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் இதுவரை திரும்ப பெறப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் எவ்வளவு என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி கவர்னர் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மக்கள் தங்கள் கைகளில் இருந்த செல்லாத நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

50 percent of Rs 2,000 notes have been withdrawn: Reserve Bank Governor

அதன்பிறகு புதிய ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. துவக்கத்தில் மக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் கடந்த சில ஆண்டுகளாக புழக்கத்தில் கணிசமாக குறைந்தது. குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே ஏடிஎம்களில் இருந்து ரூ.2,000 நோட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது.

அதேபோல், 2,000 ரூபாய் நோட்டு அச்சிடுவதே 2018-19-ம் ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், மக்கள் மத்தியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. ஏதோ ஒன்றிரண்டு தாள்களை எப்போதாவது அரிதாக காண முடிந்ததே தவிர பெரும்பாலான தாள்கள் எங்கே சென்றது கூட என்று தெரியவில்லை.

கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி நாட்டில் சுமார் 3.62 லட்சம் கோடி மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இது புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் 10.8 சதவீதம்தான் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் தான் நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

50 percent of Rs 2,000 notes have been withdrawn: Reserve Bank Governor

அதன்படி, மே 23 ஆம் தேதி முதல் வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுகின்றன. இதற்காக எந்த அடையாள சான்றும் ஆவணமும் கேட்கப்படுவதில்ல்லை. இந்த நிலையில், நாட்டில் இதுவரை புழக்கத்தில் இருந்த 50 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர், இது தொடர்பாக கூறியதாவது:-

"நாட்டில் மார்ச் மாத நிலவரப்படி புழக்கத்தில் 3.62 லட்சம் கோடி 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் இருந்தன. இன்றைய நிலவரப்படி இதில் 1.80 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் வங்கிகளுக்கு வந்துள்ளன. அதாவது 50 சதவிகித தாள்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதில் 80 சதவீத தாள்கள் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+