வங்கிகளுக்கு திரும்ப வந்த 2 ஆயிரம் நோட்டுக்கள் எவ்வளவு? ரிசர்வ் வங்கி கவர்னர் அளித்த பதில்
டெல்லி: புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே 23 ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் இதுவரை திரும்ப பெறப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் எவ்வளவு என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி கவர்னர் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. மக்கள் தங்கள் கைகளில் இருந்த செல்லாத நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்பிறகு புதிய ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. துவக்கத்தில் மக்கள் மத்தியில் அதிகம் புழக்கத்தில் இருந்த ரூ.2 ஆயிரம் ரூபாய் தாள்கள் கடந்த சில ஆண்டுகளாக புழக்கத்தில் கணிசமாக குறைந்தது. குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டில் இருந்தே ஏடிஎம்களில் இருந்து ரூ.2,000 நோட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது.
அதேபோல், 2,000 ரூபாய் நோட்டு அச்சிடுவதே 2018-19-ம் ஆண்டு நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், மக்கள் மத்தியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. ஏதோ ஒன்றிரண்டு தாள்களை எப்போதாவது அரிதாக காண முடிந்ததே தவிர பெரும்பாலான தாள்கள் எங்கே சென்றது கூட என்று தெரியவில்லை.
கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி நாட்டில் சுமார் 3.62 லட்சம் கோடி மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருந்தன. இது புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் 10.8 சதவீதம்தான் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் தான் நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அதன்படி, மே 23 ஆம் தேதி முதல் வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுகின்றன. இதற்காக எந்த அடையாள சான்றும் ஆவணமும் கேட்கப்படுவதில்ல்லை. இந்த நிலையில், நாட்டில் இதுவரை புழக்கத்தில் இருந்த 50 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர், இது தொடர்பாக கூறியதாவது:-
"நாட்டில் மார்ச் மாத நிலவரப்படி புழக்கத்தில் 3.62 லட்சம் கோடி 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் இருந்தன. இன்றைய நிலவரப்படி இதில் 1.80 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் வங்கிகளுக்கு வந்துள்ளன. அதாவது 50 சதவிகித தாள்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இதில் 80 சதவீத தாள்கள் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications