லோக்சபாவுக்கான காங்கிரஸ் குழுவின் தலைவராக சோனியா காந்தி தேர்வு
Recommended Video
டெல்லி: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டத்தில் லோக்சபாவுக்கான காங்கிரஸ் குழுவின் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு கூட தேர்வாகாத நிலை காங்கிரஸுக்கு உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்தனர்.

சமாதானம்
இதைத் தொடர்ந்து ராகுல்காந்தியும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய முன்வந்தார். இது அக்கட்சியின் காரிய கமிட்டியில் ஏற்கப்படவில்லை. தொடர்ந்து தலைவர்கள் செய்த சமாதானத்தினால் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

வராமல்
எனினும் அவர் மீண்டும் தனது பதவியை ராஜினாமா செய்ய பிடிவாதமாக உள்ளார். அவரை தொடர்ந்து தலைவர்கள் சமாதானம் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் எந்த தலைவரையும் பார்க்காமலும் கட்சி அலுவலகத்திற்கு வராமலும் இருந்து வருகிறார்.
|
மாநிலங்களவை எம்பி
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடாளுமன்ற மக்களவை எம்பிக்கள் கூட்டம் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் 52 எம்பிக்களுடன் மாநிலங்களவை எம்பிக்களும் கலந்து கொண்டனர்.

ஆலோசனை
இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டது. மேலும் காங்கிரஸ் தலைவர் குறித்த தேர்வும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

சோனியா
ஏற்கெனவே லோக்சபாவுக்கான காங்கிரஸ் குழுவின் தலைவராக தற்போது சோனியா காந்தி உள்ளார். அவரது உடல் நிலை பாதிப்பு காரணமாக அப்பதவிக்கு ராகுல்காந்தி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் லோக்சபாவுக்கான காங்கிரஸ் குழுவின் தலைவராக சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிந்தார். இதையடுத்து சோனியா அப்பதவிக்கு மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications