7 நாடுகளில் வர்த்தக விசா… மோசடி மன்னன் நீரவ் மோடி குறித்து புதிய தகவல்
டெல்லி: இந்தியாவில் வங்கி மோசடி செய்து விட்டு, லண்டனுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடி, சிங்கப்பூரிலிருந்து, சுவிட்சர்லாந்துக்கு 89 கோடி ரூபாயை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் பல்வேறு மோசடிகள் தற்போது அம்பலமாகியுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி) ரூ.13,500 கோடி மோசடி தொடர்பாக, வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு பதிவு செய்யப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, சிங்கப்பூரிலிருந்து, சுவிட்சர்லாந்துக்கு ரூபாய் 89 கோடியை நீரவ் மோடி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இது தவிர, நீரவ் மோடி தனது கூட்டாளிகள் மூலம், ரூபாய் 66 கோடி மதிப்புள்ள வைரங்கள், ரூ.6.5 கோடி, 150 பெட்டி முத்து மற்றும் 50 கிலோ தங்கம் ஆகியவற்றை துபாய் மற்றும் ஹாங்காங்கில் உள்ள தனது நிறுவனங்களில் இருந்து லண்டனுக்கு கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்தியா இதற்கான ஆதாரங்களை வைத்துள்ளது.
வங்கி மோசடி செய்து விட்டு லண்டனுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடிக்கு, ஏழு நாடுகளில் தொழில்முறை விசா இருப்பது கண்டறிந்துள்ளது. கனடாவின் வர்த்தக விசா (2019 வரை செல்லுபடியாகும்), அமெரிக்கா (2020 வரை செல்லுபடியாகும்), இங்கிலாந்து (2025 வரை செல்லுபடியாகும்) மற்றும் ஸ்ஹேன்ஜென் நாடுகளில் (2019 வரை செல்லுபடியாகும்) ஆகிய நாடுகளில் வர்த்தக விசா உள்ளதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஹாங்காங், துபாய் மற்றும் சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு மற்றும் குடியிருப்பு விசா வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது
சிறையில் உள்ள நீரவ் மோடிக்கு, இங்கிலாந்து நீதிமன்றம் இரண்டு முறை பிணை வழங்க மறுத்துள்ள நிலையில், இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து, ஏப்ரல் 26 ஆம் தேதி நடக்கும் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications