ஒரே அறிவிப்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆப்பு.. 8வது ஊதியக்குழு! பாஜக அமைச்சர் சொன்ன வார்த்தை!
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கிடையில் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 8வது ஊதியக்குழு குறித்து மத்திய அரசு முக்கியமான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை, இப்படியான எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மத்தியிலேயே பேசப்பட்டு வந்த பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல்நாளில் மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, 8வது ஊதியக்குழு குறித்து எழுத்துப்பூர்வமான அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில், 8வது ஊதியக்குழுவில் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைப்பது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக எந்தவொரு பரிசீலனையும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்
கடந்த சில மாதங்களாகவே 50% அடிப்படியில் அகவிலைப்படியை இணைக்க வேண்டும் என்று பல்வேறு மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த மறுப்பு செய்தி தற்போது பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் தொடந்து முன்வைத்து வரும் இந்தக் கோரிக்கை, விலைவாசி ஏற்றமும், பணவீக்கமும் அதிகரித்திருக்கும் சூழ்நிலையையும் காரணமாகக் கொண்டது. இருப்பினும், மத்திய அரசு தற்போதைய அகவிலைப்படி உயர்வு முறைமையே தொடரும் எனக் கூறுவதால், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என நினைத்திருந்த கோடிக்கணக்கான ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
8வது ஊதியக்குழு
இதற்கிடையில், 8வது ஊதியக்குழுவை அமைப்பதற்கான ஒப்புதல் ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்டது. அதன் பணி வரையறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, கடந்த அக்டோபர் 29ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதே குழுவில் பெங்களூரு ஐஐஎம் பேராசிரியர் புலாக் கோஷ் பகுதி நேர உறுப்பினராகவும், மத்திய பெட்ரோலிய துறைச் செயலர் பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு
அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார். இந்த அமலாக்கத்தால் தற்போது பணியாற்றி வரும் 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஊதியக்கட்டமைப்பு எப்படி அமையும், எவ்வாறான மாற்றங்கள் உள்படுத்தப்படுகின்றன என்ற விவரங்கள் விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
DA இணைப்பு
அகவிலைப்படி இணைப்பு குறித்த கோரிக்கை இந்தக் சூழலில் மறுக்கப்பட்டாலும், 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் வெளியான பிறகு மீண்டும் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படியை இணைக்கப்படலாம் என மத்திய அரசின் பணியாளர் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications