அப்பாவி மக்களை கொல்ல.. டெல்லியில் ஆயுதங்கள் வாங்க 9 தீவிரவாதிகளும் திட்டம்.. விசாரணையில் பகீர்
டெல்லி: மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளில் அல்கொய்தா தீவிரவாதிகள் 9 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அப்பாவி மக்களை கொன்று குவிக்க அவர்கள் ஆயுதங்கள் வாங்க டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தனர்.
மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இரு மாநிலங்களிலும் என்ஐஏ அமைப்பினர் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

அப்போது எர்ணாகுளத்திலிருந்து 3 பேரும் முர்ஷிதாபாத்தில் இருந்து 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் 20 வயதுடையவர்கள். அனைவரும் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தவர்கள்.
கேரளாவில் கைது செய்யப்பட்டவர்கள் முர்ஷித் ஹாசன், இயாகுப் பிஸ்வாஸ், மொசாரஸ் ஹோசன் ஆகியோர் ஆவர். அது போல் மேற்கு வங்கத்திலிருந்து நஜ்முஸ் ஷாகீப், அபு சுஃபியான், மைனுள் மோன்டால், லியூ இயான் அகமது, அல் மாமுன் கமால், அடிடூர் ரெஹ்மான் ஆகியோர் ஆவர்.
இவர்களை கைது செய்ய மொத்தம் 11 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சமூகவலைதளங்கள் மூலம் பாகிஸ்தானின் அல்கொய்தா தீவிரவாதிகளால் இவர்கள் 9 பேரும் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். டெல்லி உள்ளிட்ட இடங்களில் நாச வேலைகளை செய்ய திட்டமிட்டிருந்தனர். இவர்கள் டெல்லியில் ஆயுதங்களையும் வெடி பொருள்களையும் வாங்க அவர்கள் அவர்கள் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இவர்கள் 9 பேரும் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுக்கப்படுவர் என தெரிகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications