90 கோடி வாக்காளர்கள்.. களை கட்ட போகும் லோக்சபா தேர்தல்
90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: வரப்போற தேர்தலில் கிட்டத்தட்ட 90 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட போகிறார்களாம்! இந்த தகவலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நாடே கடந்த 2 மாதமாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தது இந்த தேர்தல் தேதியைதான். தேதியை அறிவிக்காமல் ஏன் இவ்வளவு லேட்டு செய்கிறீர்கள் என்று காங்கிரஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கவே ஆரம்பித்துவிட்டது. இப்போது, எம்பி தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக நடத்தப்படுவது நம் தமிழகத்தில்தான் என்றும் அறிவிப்புகள் வந்துள்ளன.

சுனில் அரோரா
எப்படி பார்த்தாலும் நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

4 மாநிலங்கள்
அப்போது மக்களவை தேர்தல் தேதியுடன், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிஷா ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியையும் அறிவித்தார்.

புதிய வாக்காளர்கள்
இதில் 1.6 கோடி வாக்காளர்கள் 18-ல் இருந்து 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், கடந்த ஆண்டு 9 லட்சமாக இருந்த வாக்குச் சாவடிகள் இந்த முறை 10 லட்சமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதாவது கிட்டத்தட்ட 8.4. கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முகம் தெரியும்
இந்த முறை தேர்தலில் ஸ்பெஷல் என்னவென்றால், யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள வாக்களிக்கும்போது வேட்பாளர்களின் முகம் தெரியுமாம்.












Click it and Unblock the Notifications