வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ.. அலறிய ஊழியர்களால் பரபரப்பான டெல்லி.. ஆவணங்கள் எரிந்ததா?
டெல்லி: டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தால் ஊழியர்கள் ஜன்னல் வழியாக வெளியே குதிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீயை 21 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி அணைத்தனர்.
டெல்லி ஐடிஓ பகுதியில் பழைய போலீஸ் குடியிருப்புக்கு எதிரே வருமான வரித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் வருமான வரித்துறையின் வெவ்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென்று வருமான வரித்துறை அலுவலகம் இயங்கும் 3வது தளம் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். சிலர் ஜன்னல் வழியாக வெளியேற முயன்றனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அலுவலகத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் 21 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து வருமான வரி அலுவலகத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியை தொடங்கினர். தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அணைப்பதில் சிக்கல் நிலவியது.
இருப்பினும் நீண்டநேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து அலுவலகத்தில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் ஒருவர் காயமடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் 7 பேர் அலுவலகத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தற்போதைய சூழலில் வருமான வரி அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் ஏதேனும் மின்சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல் தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்ததா? என்பது பற்றிய விபரம் தெரியவில்லை.
இதுபற்றி டெல்லி தீயணைப்பு துறையின் தலைவர் அதுல் கார்க் கூறுகையில், ‛‛வருமான வரித்துறை அலுவலகத்தின் 3வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிய 5 ஆண்கள், 2 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்'' என்றார். இதுபற்றி தீயணைப்பு துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications