Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ.. அலறிய ஊழியர்களால் பரபரப்பான டெல்லி.. ஆவணங்கள் எரிந்ததா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தால் ஊழியர்கள் ஜன்னல் வழியாக வெளியே குதிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீயை 21 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி அணைத்தனர்.

டெல்லி ஐடிஓ பகுதியில் பழைய போலீஸ் குடியிருப்புக்கு எதிரே வருமான வரித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் வருமான வரித்துறையின் வெவ்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

A fire broke out at income tax office in delhi

இந்நிலையில் தான் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென்று வருமான வரித்துறை அலுவலகம் இயங்கும் 3வது தளம் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். சிலர் ஜன்னல் வழியாக வெளியேற முயன்றனர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அலுவலகத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் 21 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து வருமான வரி அலுவலகத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியை தொடங்கினர். தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அணைப்பதில் சிக்கல் நிலவியது.

இருப்பினும் நீண்டநேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து அலுவலகத்தில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் ஒருவர் காயமடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் 7 பேர் அலுவலகத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தற்போதைய சூழலில் வருமான வரி அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் ஏதேனும் மின்சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல் தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்ததா? என்பது பற்றிய விபரம் தெரியவில்லை.

இதுபற்றி டெல்லி தீயணைப்பு துறையின் தலைவர் அதுல் கார்க் கூறுகையில், ‛‛வருமான வரித்துறை அலுவலகத்தின் 3வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிய 5 ஆண்கள், 2 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்'' என்றார். இதுபற்றி தீயணைப்பு துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+