விஸ்வரூபம் எடுக்கும் ஹேக்கிங் சர்ச்சை.. வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
ஹேக்கிங் சர்ச்சைக்கு எதிராக வாட்ஸ் ஆப், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திற்கு எதிராக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: ஹேக்கிங் சர்ச்சைக்கு எதிராக வாட்ஸ் ஆப், இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திற்கு எதிராக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் ஹேக்கிங் பிரச்சனை தற்போது உலகம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது. இந்தியாவில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பாக தற்போது புதிய விவரங்களும், தகவல்களும் வெளியாகி வருகிறது.

இந்தியாவில் முக்கிய பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள், களப்பணியாளர்கள் ஆகியோரின் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களிடம் இருந்து முக்கியமான தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது.இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்று நிறுவனம்தான் இந்த ஹேக்கிங்கை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த நிறுவனம் இந்தியாவில் அரசியல்வாதிகளையும் குறி வைத்துள்ளது. அதோடு ராணுவம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் வேலை பார்க்கும் பெரிய அரசு அதிகாரிகளையும் குறி வைத்து உள்ளது. இது தொடர்பாக தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம், என்எஸ்ஓ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்து உள்ளது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொது நல வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ் ஆப் நிறுவனம் மற்றும் என்எஸ்ஓ நிறுவனம் இரண்டிற்கும் எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை என்ஐஏ விசாரிக்க வேண்டும்.
பேஸ்புக் நிறுவனத்தையும் இதில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மூத்த தலைவர் கேஎன் கோவிந்தாச்சார்யா சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தனி நபர்களின் சுதந்திரத்தையும், தனி மனித அந்தரங்கத்திற்கும் எதிராக இந்த ஹேக்கிங் நடந்துள்ளது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க பல நாடுகள் இதேபோல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு எதிராக பல்வேரு மாகாணங்களில் வழக்கு தொடுடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications