என்னங்க இது.. டெல்லியில் நடுரோட்டில் இப்படி எல்லாம் கூட நடக்குமா.. வைரலாகும் வீடியோ காட்சிகள்!
டெல்லி: டெல்லியில் நடுரோட்டில் நடந்த சம்பவம் ஒன்று இணையம் முழுக்க மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக பைக் ஸ்னாட்ச்சிங் அதிகரித்துள்ளது. பைக்கில் வந்து மொபைல், செயின் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி செல்வது வழக்கம் ஆகி உள்ளது.
பைக்கில் மெதுவாக வருவது போல வந்து, சாலையில் நடப்பவரின் அருகில் வந்து போனை பிடுங்கிவிட்டு வேகமாக பைக்கை ஓட்டி செல்லும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.

கும்பல்
சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் பைக் ஸ்னாட்சிங் அதிகரித்துள்ளது. அதிலும் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் தங்க நகைகளை இந்த கும்பல் குறி வைத்து திருடுவதும் வழக்கம் ஆகி உள்ளது. இப்படி ஒரு சம்பவம்தான் தலைநகர் டெல்லியில் நடைபெற்று உள்ளது.

டெல்லி
டெல்லியில் மக்கள் அதிகம் நடமாடும் ஷாலிமார் பாக் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பைக்கில் வந்த நபர் ஒருவர் அந்த சாலையில் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை இழுத்து அறுத்து திருடி உள்ளார். இதில் சோகம் என்னவென்றால் அந்த பெண்மணி சுமார் 150 மிமீ தரதரவென இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

மக்கள்
மக்கள் பலர் அங்கேயே இருந்தும் கூட யாராலும் அந்த பைக்கில் வந்த திருடனை தடுக்க முடியவில்லை. சம்பவ இடத்திலேயே தரதரவென இழுக்கப்பட்ட அந்த பெண் காயங்களுடன் அங்கேயே கதறி அழுதார். இதையடுத்து அருகில் இருந்த மக்கள் வந்து அவரை எழுப்பிவிட்டனர்.
போலீஸ்
இந்த வீடியோ தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் பிஸியான இடத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications