ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக மாறிவிட்டது. வங்கி கணக்கு தொடங்குவது முதல், ரேஷன் பொருட்கள் வாங்குவது, புதிய சிம் கார்டு பெறுவது, பென்ஷன் மற்றும் அரசின் நிதியுதவிகளை நேரடியாகப் பெறுவது என அனைத்துக்கும் ஆதார் இன்றியமையாதது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் எப்போதும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதற்காக, ஆதார் கார்டுதாரர்கள் தங்களுடைய முகவரிச் சான்று மற்றும் அடையாளச் சான்று ஆகிய ஆவணங்களை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொடர்ந்து அனுமதி வழங்கி வருகிறது.

தற்போது, பொதுமக்களுக்கு மேலும் பயனளிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் ஆதாரில் இலவசமாக ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 14, 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான அவகாசம் 2026 ஜூன் மாதம் முடிவடைய இருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு ஆண்டுக்கு இந்த சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Aadhaar Free Online Document Update Deadline Extended All You Need to Know

பொதுமக்கள் தங்களின் ஆதாரை மறுசரிபார்ப்பு செய்ய ஏதுவாக, மை ஆதார் இணையதளம் வழியாக முகவரி மற்றும் அடையாளச் சான்றுகளை இலவசமாகப் பதிவேற்றம் செய்யலாம். இந்தச் சலுகை ஜூன் 14, 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் இந்த ஆவணங்களை மாற்ற வேண்டும்?

உங்களின் ஆதார் கார்டு எடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகியிருந்தால், நீங்கள் கண்டிப்பாக உங்களின் தற்போதைய ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆதாரைப் புதுப்பிக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

குறிப்பாக, கீழே உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்:

ஆதார் கார்டு எடுத்து பல வருடங்கள் ஆகி, இதுவரை ஒருமுறை கூட புதுப்பிக்காதவர்கள்.

ஆதார் கார்டில் இருக்கும் பழைய முகவரியிலிருந்து தற்போது வேறு புதிய முகவரிக்கு மாறியவர்கள்.

நீண்ட நாட்களாகப் பயன்படுத்தியதால் உங்களின் அடையாள ஆவணங்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால்.

உங்களின் பெயர், பிறந்த தேதி போன்றவற்றில் சிறிய திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தால்.

வங்கிகள் அல்லது பிற இடங்களில் கேஒய்சி சரிபார்ப்பின் போது அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சனைகளைச் சந்திப்பவர்கள்.

ஆதாரைப் புதுப்பிக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும்?

உங்களின் ஆதாரில் உள்ள தகவல்கள் பழையதாகவோ அல்லது தவறாகவோ இருந்தால், அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிடும்.

வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்யும்போது கேஒய்சி நிராகரிக்கப்படலாம்.

புதிய வங்கி கணக்கு அல்லது வர்த்தகத்திற்கான டீமேட் கணக்குகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படும்.

புதிய மொபைல் சிம் கார்டு வாங்குவதில் சிக்கல்கள் எழலாம்.

அரசின் நேரடி மானிய உதவித் தொகைகள், முதியோர் பென்ஷன் மற்றும் இதர சலுகைகளைப் பெறுவதில் தடங்கல் வரலாம்.

பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை இணைத்துச் சரிபார்க்கும் போது தோல்வியில் முடியலாம்.

கட்டணம் எப்போது வசூலிக்கப்படும்?

இந்த இலவசச் சலுகை என்பது ஆன்லைனில் 'மை ஆதார்' போர்ட்டல் வழியாக நீங்களாகவே ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு மட்டுமே பொருந்தும்.

அதே நேரத்தில், உங்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற சுயவிவரத் தகவல்களை மாற்ற விரும்பினால் அல்லது நேரடியாக அருகில் உள்ள ஆதார் சேவை மையத்திற்குச் சென்று புதுப்பிக்க நினைத்தால், அதற்கான அரசு நிர்ணயித்த நிலையான கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்.

எனவே, உங்களின் ஆதார் ஆவணங்களைப் புதுப்பிக்காமல் இருந்தால், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி ஜூன் 14, 2027-க்குள் ஆன்லைனில் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். தேவையற்ற அலைச்சல்களையும், அரசுச் சலுகைகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களையும் தவிர்க்க உடனே உங்களது ஆதாரைச் சரிபார்க்கவும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+