தேர்தல் முடிவு வந்த கையோடு இதைத்தான் செய்யனும்.. அகிலேஷும் ஆம் ஆத்மியும் பேசி எடுத்த முடிவு!
டெல்லி: தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் பாஜக ஆட்சியமைப்பதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என சமாஜ்வாதி கட்சியும் ஆம் ஆத்மியும் பேசி முடிவு எடுத்துள்ளன.
நாடாளுமன்றத்துக்கான 17 வது லோக்சபா தேர்தல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து அன்றைய தினம் மாலையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாகவே வந்துள்ளது. இதனால் பாஜக தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் திட்டம்
அதேநேரம் பாஜக ஆட்சியமைப்பதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக சந்திர பாபு நாயுடு, சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோர் பல்வேறு கட்சியின் தலைவர்களையும் சந்தித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் முடிவு
பாஜக அல்லாத கட்சியே மத்தியில் ஆள வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன. இதற்காக கர்நாடகா பாணியில் அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அகிலேஷ்- சஞ்சய் சந்திப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் இன்று சந்தித்தார்.

என்ன செய்யவேண்டும்
அப்போது இருவரும், கருத்துக்கணிப்பு முடிவுகளை போல வாக்குப்பதிவு முடிவுகளும் ஒருவேலை பாஜகவுக்கு சாதகமாக வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். தேர்தல் முடிவுக்கு பிறகு கையாள வேண்டிய யுத்திகள் குறித்தும் விவாதித்தனர்.

எக்ஸிட் போல்கள்
இந்த சந்திப்புக்கு பிறகு ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் முடிவுக்கு பிறகு கையாள வேண்டிய யுத்திகள் குறித்து விவாதித்தோம். அப்போது எக்ஸிட் போல் முடிவுகள் குறித்தும் பேசினோம்.

பாஜகவை தடுக்க வேண்டும்
பாஜகவை ஆட்சியமைப்பதில் இருந்து தடுக்கவேண்டும் என்பதற்கே முன்னுரிமை அளித்துள்ளோம். உத்தரப்பிரதேசத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 60க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும்.

மத்தியில் வலுவான ஆட்சி
தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக நாடு முழுவதும் இல்லாமலேயே போய்விடும். முன்பை போலவே கருத்துக்கணிப்புகள் பொய்தான் என இம்முறையும் நிரூபிக்கப்படும். எதிர்க்கட்சிகள் தான் மத்தியில் வலுவான ஆட்சியை அமைக்கும். இவ்வாறு ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் தெரிவித்தார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications