ஜாமர் வாகனங்கள் சூழ.., விவிஐபி போல அபிநந்தனை அழைத்து வந்த பாகிஸ்தான் ராணுவம்
Recommended Video

டெல்லி: விங் கமாண்டர் அபிநந்தன், ஜாமர் வாகனம் புடை சூழ மிகுந்த பாதுகாப்பாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்தியா-பாகிஸ்தான் நடுவே உச்சபட்சமாக போர் பதற்றம் ஏற்பட்ட சூழலில், இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனால் இரு நாடுகள் நடுவே பதற்றம் குறையும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், லாகூரிலிருந்து கார் மூலமாக, அபிநந்தன், இந்திய எல்லையான வாகாவிற்கு அழைத்து வரப்பட்டார். அவர் வந்த டொயோட்டோ வகை கறுப்பு வண்ண காருக்கு முன்னும் பின்னும், பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் அணி வகுத்தன.
அந்த கார்களில் ஜாமர்களும் பொருத்தப்பட்டிருந்தன. ரிமோட் குண்டுகளை பயன்படுத்தி தீவிரவாதிகள் அல்லது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்திவிட கூடாது என்பதற்காக இவ்வாறு ஜாமர் வசதி கொண்ட பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ அபிநந்தன் அழைத்து வரப்பட்டார்.
இந்தியா-பாகிஸ்தான் நடுவே இணக்கமான சூழ்நிலை உருவாகிவிட கூடாது என்பதற்காக, தீவிரவாதிகளோ அல்லது சர்வதேச எதிரி நாடுகளோ, அபிநந்தன் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ எச்சரித்ததன் காரணமாக இவ்வாறு அபிநந்தனுக்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications