ABPExitPoll: ம.பியில் காங். 126 தொகுதிகளை வெல்லும்.. ஆட்சியைப் பறி கொடுக்கிறது பாஜக!
ம.பி.யில் வெற்றி வாய்ப்பை இழக்கிறது பாஜக என கருத்து கணிப்பு கூறுகிறது.
Recommended Video
டெல்லி: மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று ஏபிபி எக்சிட் போல் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
5 மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிந்துள்ளன. இதையடுத்து இங்கு வாக்கெடுப்புக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை முன்னணி டிவிகள் வெளியிட்டு வருகின்றன.
ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி காங்கிரஸுக்கு இங்கு 126 தொகுதிகள் கிடைக்குமாம். அதேசமயம், ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு 94 இடங்களே கிடைக்குமாம்.
மற்றவர்களுக்கு 10 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இந்த மாநிலத்தில் 230 தொகுதிகள் உள்ளன.
ஏபிபி டிவி-சிஎஸ்டிஎஸ் எக்சிட் போல் முடிவு:
ஏபிபி டிவி-சிஎஸ்டிஎஸ் எக்சிட் போல் முடிவுகளின்படி சட்டிஸ்கரில் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏபிபி நடத்திய கருத்துக் கணிப்பில் சட்டீஸ்கரில் பாஜக 52 தொகுதிகளை வெல்லும் என்றும் காங்கிரஸ் 35 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கட்சிகளுக்கு 3 தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் ஏபிபி டிவி-சிஎஸ்டிஎஸ் எக்சிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.