மோடியா? ராகுலா? யார் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்.. ஏபிபி - சி வோட்டர் பரபர சர்வே!
இந்தியாவில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியில் யார் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே நடத்தி இருக்கிறது.
டெல்லி: இந்தியாவில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியில் யார் பிரபலமான அரசியல்வாதி, யார் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே நடத்தி இருக்கிறது.
லோக் சபா தேர்தலுகான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து வரிசையாக நிறைய தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகிறது.

கட்சிகள் எல்லாம் மிக தீவிரமாக இதற்காக ஆலோசனை செய்து வருகிறது. இந்த நிலையில் யார் பிரபலமான அரசியல்வாதி, யார் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று ஏபிபி - சி வோட்டர் சர்வே நடத்தி இருக்கிறது. பல தலைவர்கள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.
ஆனாலும் போட்டி பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையில்தான் போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியே இந்த ரேஸில் வெற்றிபெற்று இருக்கிறார்.
அதே சமயம் ராகுல் காந்தியின் புகழ் முன்பைவிட இந்தமுறை அதிகம் ஆகி இருக்கிறது. பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் நரேந்திர மோடியே என 50 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 39 சதவீத ஆதரவு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. ராகுல் காந்தி 20 சதவிகிதத்தில் இருந்து 39 சதவிகிதத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
ஆனாலும் பிரதமர் மோடி ஐந்து மாநில தேர்தல் தோல்விக்கு பின்பும் கூட அதிக மக்களால் விரும்பப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications