இலங்கை செல்லும் பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா செய்யும்பேருதவி ... எப்படி தெரியுமா!
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று இலங்கை செல்ல உள்ளார். அவர் இந்திய வான்வெளி பாதை வழியாக இலங்கை செல்ல இந்தியா அனுமதித்து உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா செல்வதற்கு பாகிஸ்தான் வான்வெளி பாதை வழியாக செல்லவிருந்த நிலையில் பாகிஸ்தான் அதற்கு அனுமதி மறுத்தது.
எந்த ஒரு நாடும் முட்டி மோதிக் கொண்டாலும் சாதாரண சூழ்நிலைகளில் அந்த நாடுகளின் வி.வி.ஐ.பி விமானங்களுக்கு தங்களது வான்வெளி பாதையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் அணுகுமுறை
பாகிஸ்தான் எப்போது தனி நாடு ஆகியதோ அன்றில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பாம்பும், கீரியுமா உள்ளன. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அறிவிக்கப்பட்ட போதிலும், காஷ்மீரின் சில பகுதிகள் எங்களுக்கு சொந்தமானது என்று பாகிஸ்தான் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களை தூண்டி விட்டு, அங்குள்ள வாலிபர்களை வன்முறை பாதைக்கு இழுத்து விட்டு இந்தியாவுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்தியது பாகிஸ்தான்.

உறவை முறித்துக் கொண்ட இந்தியா
இதற்கு ஒரு முடிவு கட்ட ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை அதிரடியாக ரத்து செய்த மத்திய அரசு, அதனை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஆனாலும் தொடர்ந்து இந்திய எல்லையை சீண்டுவதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் புகுவதற்கு வசதியாக பயங்கரவாதிகளுக்கு உதவிகளை செய்து வருகிறது பாகிஸ்தான். தற்போது பாகிஸ்தான் உறவை முழுமையாக முறித்துக் கொண்டுள்ளது இந்தியா.

வான்வெளி பாதையில் செல்ல அனுமதி
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று இலங்கை செல்ல உள்ளார். அவர் இந்திய வான்வெளி பாதை வழியாக இலங்கை செல்ல இந்தியா அனுமதித்து உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு நாடும் முட்டி மோதிக் கொண்டாலும் சாதாரண சூழ்நிலைகளில் அந்த நாடுகளின் வி.வி.ஐ.பி விமானங்களுக்கு தங்களது வான்வெளி பாதையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் நடைமுறையாகும்.

பாகிஸ்தான் மறுத்து இருந்தது
ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா செல்வதற்கு பாகிஸ்தான் வான்வெளி பாதை வழியாக செல்லவிருந்த நிலையில் பாகிஸ்தான் அதற்கு அனுமதி மறுத்தது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து இந்தியா அத்துமீறல் செய்ததால் வான்வெளியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு மறுத்தது. ஆனால் தற்போது இந்தியா இதனை மனதில் கொள்ளாமல் தனது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications