இலங்கை செல்லும் பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா செய்யும்பேருதவி ... எப்படி தெரியுமா!
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று இலங்கை செல்ல உள்ளார். அவர் இந்திய வான்வெளி பாதை வழியாக இலங்கை செல்ல இந்தியா அனுமதித்து உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா செல்வதற்கு பாகிஸ்தான் வான்வெளி பாதை வழியாக செல்லவிருந்த நிலையில் பாகிஸ்தான் அதற்கு அனுமதி மறுத்தது.
எந்த ஒரு நாடும் முட்டி மோதிக் கொண்டாலும் சாதாரண சூழ்நிலைகளில் அந்த நாடுகளின் வி.வி.ஐ.பி விமானங்களுக்கு தங்களது வான்வெளி பாதையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் அணுகுமுறை
பாகிஸ்தான் எப்போது தனி நாடு ஆகியதோ அன்றில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பாம்பும், கீரியுமா உள்ளன. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அறிவிக்கப்பட்ட போதிலும், காஷ்மீரின் சில பகுதிகள் எங்களுக்கு சொந்தமானது என்று பாகிஸ்தான் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களை தூண்டி விட்டு, அங்குள்ள வாலிபர்களை வன்முறை பாதைக்கு இழுத்து விட்டு இந்தியாவுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்தியது பாகிஸ்தான்.

உறவை முறித்துக் கொண்ட இந்தியா
இதற்கு ஒரு முடிவு கட்ட ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை அதிரடியாக ரத்து செய்த மத்திய அரசு, அதனை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஆனாலும் தொடர்ந்து இந்திய எல்லையை சீண்டுவதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் புகுவதற்கு வசதியாக பயங்கரவாதிகளுக்கு உதவிகளை செய்து வருகிறது பாகிஸ்தான். தற்போது பாகிஸ்தான் உறவை முழுமையாக முறித்துக் கொண்டுள்ளது இந்தியா.

வான்வெளி பாதையில் செல்ல அனுமதி
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று இலங்கை செல்ல உள்ளார். அவர் இந்திய வான்வெளி பாதை வழியாக இலங்கை செல்ல இந்தியா அனுமதித்து உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு நாடும் முட்டி மோதிக் கொண்டாலும் சாதாரண சூழ்நிலைகளில் அந்த நாடுகளின் வி.வி.ஐ.பி விமானங்களுக்கு தங்களது வான்வெளி பாதையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் நடைமுறையாகும்.

பாகிஸ்தான் மறுத்து இருந்தது
ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா செல்வதற்கு பாகிஸ்தான் வான்வெளி பாதை வழியாக செல்லவிருந்த நிலையில் பாகிஸ்தான் அதற்கு அனுமதி மறுத்தது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து இந்தியா அத்துமீறல் செய்ததால் வான்வெளியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு மறுத்தது. ஆனால் தற்போது இந்தியா இதனை மனதில் கொள்ளாமல் தனது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications