வெறுப்பை தூண்டும் வகையில் பேசினால் நடவடிக்கை.. பாஜக கபில் மிஸ்ரா குறித்து பாஜக கவுதம் கம்பீர்
டெல்லி: வெறுப்பை தூண்டும் வகையில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவின் கபில் மிஸ்ராவுக்கு டெல்லி பாஜக எம்.பி. கவுதம் காம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
டெல்லியின் வடகிழக்குப் பகுதிகள் வன்முறைகளால் பற்றி எரிகிறது. இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றும் டெல்லியில் வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் டெல்லி அரசும் தீவிரம் காட்டி வருகின்றன.
இத்தனை வன்முறைகளுக்கும் பாஜகவின் கபில் மிஸ்ராவின் பேச்சுதான் காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. கபில் மிஸ்ராதான், சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டக்காரர்கள் போராட்டத்தை முடிக்காவிட்டால் போலீசார் பேச்சை கேட்காமல் நடவடிக்கைகளில் இறங்குவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் டெல்லி பாஜக எம்பி கவுதம் கம்பீர், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். ஏற்கனவே கபில் மிஸ்ரா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications