குடியுரிமை சட்டத்துக்கு திடீர் எதிர்ப்பு- சுப்ரீம் கோர்ட் போகிறது அஸ்ஸாம் கன பரிஷத்
டெல்லி: குடியுரிமை மசோதாவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்த அஸ்ஸாம் கன பரிஷத் அமைப்பு தற்போது எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளது.
முதலில் இந்த மசோதாவை ஆதரித்த இந்த அமைப்பானது தற்போது எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது. மேலும் மசோதாவை திரும்ப பெற கோரி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்கவும் இந்த அமைப்பின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை இந்தியாவில் குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் மசோதா அண்மையில் இரு அவைகளிலும் நிறைவேறியது.

முஸ்லிம்கள்
இந்த நிலையில் இந்த மசோதாவில் இடம்பெற்ற 6 மதத்தினருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் முஸ்லிம்களின் பெயர் இல்லை. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்பபதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

கூட்டணியில் இணைப்பு
இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2016-க்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் கன பரிஷத் என்ற அமைப்பு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் லோக்சபா தேர்தலையொட்டி பாஜக, போடோலாந்து மக்கள் முன்னணி இடம்பெற்றுள்ள வடகிழக்கு ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்தது.

எதிர்ப்பு
இந்த கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 7 எம்பிக்கள் உள்ளனர். இந்த நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு இந்த அமைப்பு ஆதரவு தெரிவித்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாள் முதல் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை தலைவிரித்தாடுகிறது.

போராட்டம்
இந்த நிலையில் அஸ்ஸாமில் மசோதாவை கண்டித்து போராட்டம், தடியடி, துப்பாக்கிச் சூடு என பதற்றமான சூழல் நடந்து வந்த நிலையில் இந்த 7 எம்பிக்களுக்கும் போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குவஹாத்தியில் அம்பாரி பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர்.

அஸ்ஸாம் அமைப்பு
பின்னர் அலுவலகத்துக்குள் சென்று ஜன்னல்களை உடைத்தனர். அங்கிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தினர். அப்போது போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் அவர்களை கலைத்தனர். இந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இந்த அஸ்ஸாம் அமைப்பு தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

உச்சநீதிமன்றம்
இதையடுத்து கட்சி தலைமையகத்தில் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது குடியுரிமை மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளனர். மேலும் மசோதாவை திரும்ப பெற கோரி பிரதமர் நரேந்திர மோடியையும் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளனர்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம்












Click it and Unblock the Notifications